80 சந்தைகளில் 150 எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்கள் திறக்கும் லிவ்ஸ்பேஸ்80 சந்தைகளில் 150 எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்கள் திறக்கும் லிவ்ஸ்பேஸ் ...  ‘வரி வசூல் உயர்வு வளர்ச்சியை காட்டுகிறது’ ‘வரி வசூல் உயர்வு வளர்ச்சியை காட்டுகிறது’ ...
புதிய உச்சம் : சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளை கடந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2021
10:16

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகின்றன. முதன்முறையாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளது. அதேப்போன்று தேசிய பங்குச்சந்தையின் நிப்டியும் 17,900 புள்ளிகளை கடந்துள்ளது.

கொரோனா பரவல் அதிகமிருந்த நிலையிலும், இந்திய பங்குச் சந்தைகள் பாதிக்கப்படாமல், உச்சம் தொட்டபடி இருந்தன. சென்செக்ஸ் 50 ஆயிரம், 55 ஆயிரம், 58 ஆயிரம் என தொடர்ந்து உயர்வை கண்டு வந்தது. அந்த வகையில், நேற்றைய வர்த்தகத்தின் இடையே, 59 ஆயிரத்து 957 புள்ளிகளை எட்டியது சென்செக்ஸ். பின், வர்த்தகத்தின் இறுதியில் 59 ஆயிரத்து, 885 புள்ளிகளுடன் புதிய உச்சத்தில் நிலை பெற்றது. தேசிய பங்குச் சந்தையின் ‘நிப்டி’யும், 17 ஆயிரத்து 823 புள்ளிகளில் நிலைபெற்றது.

இன்றைய வர்த்தகத்தில் நிச்சயம் சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளை எட்டும் என முதலீட்டாளர்கள் காத்திருந்தனர். அதன்படியே இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் சென்செக்ஸ் 325.71 புள்ளிகள் உயர்ந்து 60,211.07ஆகவும், நிப்டி 93.30 புள்ளிகள் உயர்ந்து 17,916.30 எனும் புதிய உச்சத்தை தொட்டது. இந்தியாவில் அடுத்தடுத்து பண்டிகை காலம் என்பதால் இப்போதே பல வர்த்தகங்கள் சூடு பிடிக்க தொடங்கி உள்ளன. அந்தவகையில் பங்குச் சந்தைகளை பொறுத்தவரை தீபாவளி கொண்டாட்டம் இப்போதே துவங்கி விட்டது எனலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)