பதிவு செய்த நாள்
24 செப்2021
22:26
சண்டிகர்:இந்திய பொருளாதாரம் புத்துயிர் பெறும் பாதையில் பயணிப்பதாகவும்; ஜி.எஸ்.டி., மற்றும் நேரடி வரிகளின் வசூல் அதை உறுதிப்படுத்துவதாக உள்ளதாகவும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது அவர் மேலும் கூறியதாவது:நாட்டின் பொருளாதாரம் புத்துயிர் பெற்று வருவதற்கான அறிகுறிகளையும், மறுமலர்ச்சிக்கான சான்றுகளையும் என்னால்தெளிவாக காணமுடிகிறது. அப்படி இல்லை என்றால், ஜி.எஸ்.டி., மற்றும் நேரடி வரிவிதிப்பு ஆகியவற்றில் இந்த அளவுக்கு நம் வசூல் இருக்காது.நேரடி வரிவிதிப்பில், அரையாண்டுக்கான இலக்கு ஏற்கனவே எட்டப்பட்டு விட்டது.
மேலும், ஜி.எஸ்.டி., வசூல் சராசரியாக மாதம் ஒன்றுக்கு, கிட்டத்தட்ட 1.15 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது.இந்த விபரங்கள், பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்கான நிலையான பாதையில் இருப்பதை தெளிவாக காட்டுகின்றன.தற்போது சில்லரை மற்றும்சிறு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில்அதிக ஆர்வம் காட்டுகின்றனர்; முதலீடு செய்கின்றனர். இதற்கு முன், சில்லரை முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்டு வாயிலாகவே சந்தையில் பங்கெடுத்துவந்தனர். தற்போது நேரடியாக முதலீடுகளை மேற்கொள்கின்றனர்.
பங்குச் சந்தை வர்த்தகம்அனைத்துமே வெளிப்படைத் தன்மை கொண்ட வகையில் நடைபெறுகின்றன. இதன் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் குறித்த நம்பிக்கை அதிகரித்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|