பதிவு செய்த நாள்
24 செப்2021
22:33
மும்பை:அனைவரும் எதிர்பார்த்திருந்த சாதனையை இறுதியில் நிகழ்த்தி விட்டது, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘சென்செக்ஸ்!’
கடந்த வியாழக் கிழமையே சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி நிலைபெற்று விடும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், மயிரிழையில் வாய்ப்பு தவறி விட்டது.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை அன்று எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது. இம்முறை அந்த சாதனை நிகழ்த்தப்பட்டு விட்டது.கடந்த 1990ம் ஆண்டு ஜூலை மாதம், முதன் முதலாக சென்செக்ஸ் 1,000 புள்ளிகளைத் தொட்டது. இப்போது 31 ஆண்டுகளுக்குபின், 60 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியுள்ளது.
இந்த 31 ஆண்டுகளில் பல்வேறு சிகரங்களையும், சறுக்கல்களையும் சந்தை சந்தித்துள்ளது.
கடந்த 1992ல் ஹர்ஷத் மேத்தா மோசடி, 1993ல் மும்பை பங்குச் சந்தை கட்டடத்தில் குண்டு வெடிப்பு, 1999ல் கார்கில் போர், 2002ல் பார்லி.,யில் பயங்கரவாதிகள் தாக்குதல் என, பல தடை
களைத் தாண்டியே இந்நிலை எட்டப்பட்டுள்ளது.
கடந்த 2020 மார்ச்சில் 23 சதவீத சரிவை கொரோனாவால் கண்டதும் குறிப்பிடத்தக்க
ஒன்றாகும். ஆனால், அதே கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில் தான், நடப்பு ஆண்டில் சென்செக்ஸ் 50 ஆயிரம்; 60 ஆயிரம் புள்ளிகள் என உச்சம் தொட்டுள்ளது.எட்டே மாதங்களில் 50 ஆயிரம் புள்ளிகளிலிருந்து, 60 ஆயிரம் புள்ளிகளுக்கு உயர்ந்ததும் ஒரு மகத்தான சாதனை தான்.நேற்றைய வர்த்தகத்தில், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’யும்
17 ஆயிரத்து 853 புள்ளிகளைத் தொட்டு, புதிய சிகரத்தை எட்டியுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|