பதிவு செய்த நாள்
24 செப்2021
22:36
சென்னை:பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ‘காசாகிராண்டு’ அடுத்த ஆண்டில் புதிய பங்கு வெளியீட்டுக்கு வர இருப்பதாக தெரிவித்துள்ளது; அத்துடன் பல்வேறு முதலீட்டு திட்டங்களையும் அறிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான அருண் எம்.என்., கூறியதாவது:அடுத்த ஆண்டில் புதிய பங்கு வெளியீட்டுக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை நிர்வகிக்க, ‘மோதிலால் ஆஸ்வால்’ மற்றும் ‘ஜே.எம்.பைனான்ஷியல்’ ஆகிய நிறுவனங்கள் நியமிக்கப்பட்டுள்ளன.நிறுவனத்தின் மொத்த வருவாயில், சென்னையின் பங்களிப்பு 65 சதவீதமாகவும்; பெங்களூருரின் பங்களிப்பு 35 சதவீதமாகவும் உள்ளன. அடுத்தகட்டமாக, 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை வாங்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அடுத்த ஆண்டுக்குள் குடியிருப்பு ரியல் எஸ்டேட் பிரிவில், சென்னையில் 3,000 கோடி ரூபாயும், பெங்களூரில் 1,250 கோடி ரூபாயும், பிற சந்தைகளில் 750 கோடி ரூபாயுமாக மொத்தம் 5,000 கோடி ரூபாயை முதலீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்கா மற்றும் துபாயில் விற்பனை அலுவலகங்களை அமைக்க உள்ளது. கடந்த ஆண்டில் விற்பனை 2,300 கோடி ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் 3,750 கோடி ரூபாயாக இலக்கு வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|