பதிவு செய்த நாள்
28 செப்2021
19:44
புதுடில்லி:இந்தியாவில் புதிதாக, ‘சமூக பங்குச் சந்தை’ அமைப்பதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது.
இருப்பினும், எவ்வளவு காலத்துக்குள் இந்த சந்தை அமைக்கப்படும் என்பது குறித்து தற்போது சொல்ல முடியாது என, செபி தலைவர் அஜய் தியாகி தெரிவித்துள்ளார்.
சமூக பங்குச் சந்தை என்பது, இந்தியாவில் புதிய முயற்சியாகும். இத்தகைய சந்தையை அமைப்பது குறித்த அறிவிப்பை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 2019 – 20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையின் போது வெளியிட்டார்.
தன்னார்வ மற்றும் சமூக சேவை நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான நிதியை திரட்டி கொள்வதற்கான ஒரு சந்தை தான், இந்த சமூக பங்குச் சந்தை. சமூக நிறுவனங்கள், இந்த சந்தையில் பங்குகள், கடன் பத்திரங்கள், மியூச்சுவல் பண்டு யூனிட்டுகள் ஆகியவற்றை வெளியிட்டு, நிதி திரட்டிக் கொள்ளலாம். இதனால், வெளிநாட்டு நிதியை எதிர்பார்க்க தேவையிருக்காது.மேலும், டிஜிட்டல் முறையிலான தங்க சந்தைக்கான திட்டத்துக்கும், செபி அங்கீகாரம் வழங்கி உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|