பதிவு செய்த நாள்
28 செப்2021
19:52
புதுடில்லி:‘டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்’ நிறுவனம், அதன் வாகனங்களின் விலையை, 2 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த விலை உயர்வு, அக்டோபர் முதல் தேதியிலிருந்து அமலாக உள்ளதாகவும்; உள்ளீட்டு பொருட்கள் விலை அதிகரிப்பால், இந்த விலை உயர்வு நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகவும், டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், ‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனமும் இதே காரணத்தால், அக்டோபர் முதல் 2 சதவீதம் அளவுக்கு விலையை அதிகரிக்க இருப்பதாக அறிவித்தது. இதேபோல், ‘மாருதி சுசூகி’ நிறுவனமும், 1.9 சதவீத விலை உயர்வை அறிவித்தது. தற்போது இந்த வரிசையில், டொயோட்டா நிறுவனமும் இணைந்துள்ளது.
இது குறித்து டொயோட்டா அறிவித்துஉள்ளதாவது:நிறுவனத்தின் தயாரிப்பான, ‘வெல்பயர்’ தவிர, அனைத்து வித மாடல்களின் விலையும் அக்டோபரிலிருந்து அதிகரிக்க உள்ளது. இந்த விலை உயர்வு, உள்ளீட்டு செலவுகள் அதிகரிப்பை, ஓரளவு ஈடுசெய்ய அவசியமாகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|