பதிவு செய்த நாள்
28 செப்2021
19:55
மும்பை:‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், ஒரு லட்சம் ‘அல்ட்ராஸ்’ காரை தயாரித்து சாதனை படைத்துள்ளது. அதன் ஒரு லட்சமாவது அல்ட்ராஸ் காரை, புனே ஆலையிலிருந்து தயாரித்து வெளியிட்டுள்ளதாக, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் இறுதியில் அல்ட்ராஸ் கார் தயாரிப்பை துவங்கியது. கடந்த 2020 ஜனவரியில், சந்தையில் இந்த காரை அறிமுகம் செய்தது.‘பிரீமியம் ஹேட்ச்பேக்’ பிரிவைச் சேர்ந்த இந்த கார், நடப்பு நிதியாண்டில், இப்பிரிவில் சந்தையில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மாதம் ஒன்றுக்கு சராசரியாக, 6 ஆயிரம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக, கடந்த மார்ச் மாதத்தில் 7,550 அல்ட்ராஸ் கார்கள் விற்பனை ஆகியுள்ளன. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இருவகைகளிலும் மொத்தம் 6 விதங்களில் விற்பனை ஆகிறது.
மிகவும் சோதனையான காலத்தில், வாடிக்கையாளர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை மற்றும் ஆதரவால், ஒரு லட்சமாவது அல்ட்ராஸ் கார் எனும் மைல்கல்லை எட்டியுள்ளோம் என, டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|