பதிவு செய்த நாள்
28 செப்2021
20:09
மும்பை:கொரோனா முடக்கத்துக்குப் பின், தற்போது பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், மோசடி பேர்வழிகளின் கவனம் பயணம் மற்றும் ஓய்வு.சரக்கு போக்குவரத்து, சமூக வலைதளங்கள் ஆகியவற்றின் பக்கம் திரும்பி இருப்பதாக, கடன் தகவல் நிறுவனமான, ‘டிரான்ஸ்யூனியன்’ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் மோசடி முயற்சிகள், பயணம் மற்றும் ஓய்வு பிரிவில் 269 சதவீதம் அதிகரித்திருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், ‘ஆன்லைன் டேட்டிங்’ உள்ளிட்ட சமூக வலைதள பிரிவில் 267 சதவீதமும்; சரக்கு போக்குவரத்து உள்ளிட்டவற்றில் 94 சதவீதமும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கொரோனா சம்பந்தமான தடைகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, பயணம் மற்றும் ஓய்வு பிரிவில், கிரெடிட் கார்டு சம்பந்தமான மோசடிகள் அதிகரித்துள்ளன.அதேசமயம் தொலை தொடர்பு, சில்லரை வர்த்தகம், சூதாட்டம் ஆகிய பிரிவுகளில் மோசடிகள் குறைந்து உள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|