பதிவு செய்த நாள்
06 அக்2021
20:46
புதுடில்லி:நாட்டின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் நிலையில், அதன் பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் வாங்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டின் போது, அதன் பங்குகளை அன்னிய முதலீட்டாளர்களும் வாங்க வகை செய்யும் விதமாக, சட்டத் திருத்தம் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.இந்நிறுவனத்தின் 20 சதவீத பங்குகள் வரை அன்னிய முதலீட்டாளர்கள் வாங்க ஏதுவாக, இந்த சட்டத் திருத்தம் இருக்கக் கூடும்.
இந்த சட்டத் திருத்தத்தை கொண்டு வரும் பட்சத்தில், அன்னிய முதலீட்டாளர்கள் அரசின் அனுமதி இன்றி, ‘ஆட்டோமேட்டிக் ரூட்’ வாயிலாகவே எல்.ஐ.சி., நிறுவன பங்குகளை வாங்கிக் கொள்ள முடியும். இது குறித்து, அரசு அதிகாரிகள் கலந்து பேசியுள்ளனர்.அன்னிய நேரடி முதலீட்டாளர்கள், இந்திய காப்பீட்டு நிறுவனங்களில் 74 சதவீதம் வரை முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது என்ற போதிலும், இந்த விதி எல்.ஐ.சி., நிறுவனத்துக்கு பொருந்தாது.
இதற்கு பார்லி.,யில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். இதையடுத்தே, அரசு இதற்கான முயற்சியில் இறங்கி உள்ளது.எல்.ஐ.சி.,யின் புதிய பங்கு வெளியீட்டை, அடுத்த மார்ச் மாதத்துக்கு உள்ளாக நடத்த வேண்டும் என அரசு முயற்சிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|