உள்நாட்டு விமான பயணியர் செப்டம்பரில் சற்று அதிகரிப்பு உள்நாட்டு விமான பயணியர் செப்டம்பரில் சற்று அதிகரிப்பு ...  இந்தியாவில்  ‘7 லெவன்’ கடைகள் ‘ரிலையன்ஸ் ரீட்டெய்ல்’ துவக்குகிறது இந்தியாவில் ‘7 லெவன்’ கடைகள் ‘ரிலையன்ஸ் ரீட்டெய்ல்’ துவக்குகிறது ...
இந்திய செல்வந்தர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட 50 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2021
20:50

புதுடில்லி:இந்தியாவின் செல்வந்தர்கள் குறித்த ‘போர்ப்ஸ் 2021’ பட்டியலில், முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார். கடந்த 2008ம் ஆண்டிலிருந்தே முதலிடத்தில் முகேஷ் அம்பானி இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.போர்ப்ஸ் இந்தியா மொத்தம் 100 பேர் கொண்ட செல்வந்தர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்:

* இந்திய பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு, கடந்த ஆண்டை விட, 50 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு உள்ளான இரண்டாவது ஆண்டிலும், இவர்களது வருவாய் அதிகரித்து உள்ளது

* பட்டியலில் இடம்பெற்றுள்ள பணக்காரர்களில் 80 சதவீத பேர்களின் வருவாய், கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 61 பணக்காரர்களின் சொத்து மதிப்பு 7,500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உயர்வை கண்டுள்ளது

* முதலிடத்தை பிடித்துள்ள முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 6.95 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. இவரது சொத்து மதிப்பு, கடந்த ஆண்டைவிட 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்து உள்ளது

* இரண்டாவது இடத்தை பிடித்துள்ள அதானியின் சொத்து மதிப்பு, கடந்த ஆண்டைவிட 200 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. அதானியின் சொத்து மதிப்பு 5.61 லட்சம் கோடி ரூபாய். கடந்த ஆண்டில் மட்டும் 3.71 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்து உள்ளது

* ஷிவ் நாடார் 2.33 லட்சம் கோடி ரூபாய் உடன் மூன்றாவது இடத்திலும், ராதாகிஷன் தமானி 2.21 லட்சம் கோடி ரூபாயுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்

* இந்த பட்டியலில் ஆறு பெண்கள் இடம்பெற்றுள்ளனர். ‘ஜிண்டால்’ குழுமத்தைச் சேர்ந்த சாவித்திரி ஜிண்டால் 7வது இடத்தை பிடித்துஉள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)