‘சூப்பர் பணக்காரர்கள்’ பட்டியல் இடம்பிடித்தார் முகேஷ் அம்பானி ‘சூப்பர் பணக்காரர்கள்’ பட்டியல் இடம்பிடித்தார் முகேஷ் அம்பானி ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
விமான நிறுவனங்கள் ஒன்றிணைப்பு டாடாவின் அடுத்த திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2021
19:46

மும்பை:‘ஏர் இந்தியா’ நிறுவனத்தை, ‘டாடா சன்ஸ்’ வாங்கி உள்ள நிலையில், அடுத்த கட்டமாக, டாடாவின் மூன்று விமான சேவைகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வர திட்டமிடப்படுகிறது.

இது குறித்து உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: ஏர் இந்தியாவை ஏலத்தில் எடுத்தது வேண்டுமானால் டாடா நிறுவனத்துக்கு சுலபமானதாக இருக்கலாம்.ஆனால், அந்நிறுவனத்தை வெற்றிகரமான ஒன்றாக மாற்றுவது அத்தனை எளிதானதல்ல.இது, டாடா நிறுவனத்துக்கும் நன்றாக தெரியும்.

அதனால் தான் கடந்த 18 மாதங்களாக, பல்வேறு வகையான ஆலோசனைகளை செய்து வருகிறார்கள். அனைத்து நடைமுறைகளும் நிறைவு பெற்று, ஏர் இந்தியா நிறுவனம் கைக்கு வந்த பின், முதல் கட்டமாக ‘விஸ்டாரா, ஏர் ஆசியா , ஏர் இந்தியா’ ஆகிய மூன்றையும் ஒரு குடைக்கு கீழ் கொண்டு வர திட்டமிடப்பட்டுஉள்ளது.

இதற்காக, கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக, 150க்கும் மேற்பட்ட உயரதிகாரிகள் வேலை பார்த்து வந்தனர்.இந்த மூன்று நிறுவனங்களின் மொத்த உள்நாட்டு சந்தை பங்களிப்பு தற்போது 26.9 சதவீதமாக உள்ளது. இதனால், ‘இண்டிகோ’ நிறுவனத்துக்கு அடுத்தபடியாக, இரண்டாவது பெரிய நிறுவனமாக உருவெடுக்கும்.

மேலும், டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்கள், இந்த விமான சேவைக்கு பலவகைகளில் கைகொடுக்கும்.அது தகவல் தொழில்நுட்பமாக இருந்தாலும் சரி; பயணியருக்கான உணவாக இருந்தாலும் சரி. இப்படி டாடாவின் அனைத்து நிறுவனங்களும், ஏர் இந்தியாவுடன் எந்த வகையில் இணைந்து உதவுவது என்பது குறித்தும் டாடா குழும அதிகாரிகள் திட்டங்களை தயாரித்து கையில் ரெடியாக வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)