பதிவு செய்த நாள்
12 அக்2021
08:34
புதுடில்லி: இந்திய பொருளாதாரம் மீட்சி பெறுவது விரைவுபடுத்தப்பட்டிருப்பதாக, மத்திய நிதியமைச்சகத்தின் மாதாந்திர பொருளாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிக வளர்ச்சிக்கான சீர்திருத்தங்களை மேற்கொண்டது மற்றும் தடுப்பூசி போடுவதை வேகப்படுத்தியது போன்ற நடவடிக்கைகளால், கொரோனா பாதிப்புகளிலிருந்து இந்திய பொருளாதாரத்தின் மீட்சி விரைவுபடுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நீடித்த மற்றும் நிலையான விவசாய துறை வளர்ச்சி, தயாரிப்பு மற்றும் உற்பத்தி துறைகளில் மீட்சி, சேவைகள் துறை மீண்டும் செயல்படத் துவங்கியது என பல காரணங்களால், இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் மீட்சி அதிகரித்துள்ளது.மேலும் நாட்டின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில், கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து ஏற்றுமதியின் மதிப்பு 2.25 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவுக்கு அதிகமாக உள்ளது.
மேலும், செப்டம்பரில் வர்த்தக பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. இது நுகர்வு மற்றும் முதலீட்டு தேவை அதிகரித்திருப்பதை எடுத்துக் காட்டுவதாகவே அமைந்துள்ளது.மேலும், வங்கி கடன் வளர்ச்சி விகிதமும் அதிகரித்து, 6.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் இது 5.3 சதவீதமாக குறைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஊரடங்குகள் தளர்த்தப்பட்டு வருவதை அடுத்து, வினியோக சேவையும் அதிகரித்துள்ளது.இவை அனைத்துமே சாதகமான அம்சங்களாக இருந்த போதும், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டு வரும் மாறுதல்கள், பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இவ்வாறு அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|