'ஏர் இந்தியா' கடனை அடைக்க பத்திரங்கள் வெளியிட திட்டம் 'ஏர் இந்தியா' கடனை அடைக்க பத்திரங்கள் வெளியிட திட்டம் ...  காகித தொல்லையிலிருந்து விடுபடும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் காகித தொல்லையிலிருந்து விடுபடும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ...
விரைவான மீட்சி ஏற்பட்டுள்ளது நிதியமைச்சக அறிக்கை தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2021
08:34

புதுடில்லி: இந்திய பொருளாதாரம் மீட்சி பெறுவது விரைவுபடுத்தப்பட்டிருப்பதாக, மத்திய நிதியமைச்சகத்தின் மாதாந்திர பொருளாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிக வளர்ச்சிக்கான சீர்திருத்தங்களை மேற்கொண்டது மற்றும் தடுப்பூசி போடுவதை வேகப்படுத்தியது போன்ற நடவடிக்கைகளால், கொரோனா பாதிப்புகளிலிருந்து இந்திய பொருளாதாரத்தின் மீட்சி விரைவுபடுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நீடித்த மற்றும் நிலையான விவசாய துறை வளர்ச்சி, தயாரிப்பு மற்றும் உற்பத்தி துறைகளில் மீட்சி, சேவைகள் துறை மீண்டும் செயல்படத் துவங்கியது என பல காரணங்களால், இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் மீட்சி அதிகரித்துள்ளது.மேலும் நாட்டின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில், கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து ஏற்றுமதியின் மதிப்பு 2.25 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவுக்கு அதிகமாக உள்ளது.

மேலும், செப்டம்பரில் வர்த்தக பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. இது நுகர்வு மற்றும் முதலீட்டு தேவை அதிகரித்திருப்பதை எடுத்துக் காட்டுவதாகவே அமைந்துள்ளது.மேலும், வங்கி கடன் வளர்ச்சி விகிதமும் அதிகரித்து, 6.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் இது 5.3 சதவீதமாக குறைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஊரடங்குகள் தளர்த்தப்பட்டு வருவதை அடுத்து, வினியோக சேவையும் அதிகரித்துள்ளது.இவை அனைத்துமே சாதகமான அம்சங்களாக இருந்த போதும், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டு வரும் மாறுதல்கள், பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இவ்வாறு அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)