ஊழியர்களை சிறப்பாக நடத்தும் நிறுவனங்கள் உலகளவில் ரிலையன்சுக்கு 52வது இடம் ஊழியர்களை சிறப்பாக நடத்தும் நிறுவனங்கள் உலகளவில் ரிலையன்சுக்கு 52வது ... ...  நாட்டின் சிமென்ட் உற்பத்தி 12 சதவீதம் அதிகரிக்கும் நாட்டின் சிமென்ட் உற்பத்தி 12 சதவீதம் அதிகரிக்கும் ...
நாட்டின் வர்த்தக பற்றாக்குறை வரலாறு காணாத அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2021
20:28

புதுடில்லி:நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 1.69 லட்சம் கோடி ரூபாயாக, கடந்த செப்டம்பரில் உயர்ந்துள்ளது. இது, இதுவரை இல்லாத உயர்வாகும். இதற்கு முன் அதிகபட்சமாக, கடந்த 2012 அக்டோபரில் 1.52 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

கடந்த செப்டம்பர் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி 22.63 சதவீதம் அதிகரித்து, 2.54 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. முக்கியமான துறைகளில் ஏற்றுமதி செயல்பாடு சிறப்பாக இருந்தது இதற்கு காரணமாக அமைந்தது. ஏற்றுமதி அதிகரித்ததை போலவே இறக்குமதியும் மதிப்பீட்டு காலத்தில் அதிகரித்துள்ளது.

செப்டம்பரில் இறக்குமதி 84.77 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 4.23 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இம்மாதத்தில் கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் இறக்குமதி அதிகரித்தது முக்கிய காரணமாகும்.இதையடுத்து, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 1.69 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, இதுவரை இல்லாத அளவாகும். இதற்கு முன் அதிகபட்சமாக, கடந்த 2012 அக்டோபரில், 1.52 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

இப்போது அதையும் தாண்டி, 1.69 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.தங்கத்தின் இறக்குமதி கடந்த செப்டம்பரில் 38 ஆயிரத்து 325 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு செப்டம்பரில் இதுவே 4,508 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்றுமதியை பொறுத்தவரை, நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் 57.53 சதவீதம் அளவுக்கு உயர்வு கண்டுள்ளது. ஏற்றுமதி அதிகரித்து வருகின்ற போதிலும், கூடவே வர்த்தக பற்றாக்குறையும் அதிகரித்து வருவது குறித்து கவனமாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)