பதிவு செய்த நாள்
15 அக்2021
21:58
டிஜிட்டலில் தபால் பாலிசி
தபால் துறையின், பி.எல்.ஐ., எனும் தபால் ஆயுள் காப்பீடு மற்றும், ஆர்.பி.எல்.ஐ., எனும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசி பத்திரங்கள் இனி 'மின்னணு வடிவத்தில்' கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிஜிட்டல் நகல், அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் செல்லுபடியாகும் ஆவணமாக கருதப்படும் என்றும் தபால் துறை அறிவித்துள்ளது.
அல்ட்ரா பிரீமியம் மளிகை
‘ரிலையன்ஸ் ரீட்டெய்ல்’ நிறுவனம், ‘பிரெஸ்பிக்’ எனும் பிராண்டு பெயரில், ஸ்டோர்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதன் வாயிலாக, ‘அல்ட்ரா பிரீமியம்’ மளிகை பொருட்கள் பிரிவில் நுழைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த பிரெஸ்பிக் எனும் ஸ்டோர்களில், உயர்தர உணவு பொருட்கள் மற்றும் பானங்கள் கிடைக்கும். முதல் ஸ்டோர் மும்பையில் துவங்கப்பட்டுள்ளது.
லாபத்தில் முதலீட்டாளர்கள்
கடந்த வியாழனுடன் முடிவடைந்த ஆறு வர்த்தக தினங்களில், முதலீட்டாளர்கள் 10.56 லட்சம் கோடி ரூபாயை லாபமாக ஈட்டியுள்ளனர்.
உள்நாட்டு நிறுவன பங்குகள் தொடர்ந்து உயர்வைக் கண்டு வருகின்றன. இதற்கு உலகளாவிய சந்தைகளின் சாதகமான போக்கு மற்றும் இரண்டாவது காலாண்டு முடிவுகள் சிறப்பாக இருக்கும் என்ற கணிப்பு ஆகியவை காரணமாக அமைந்ததாக, பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பத்து வாரங்களில் முடியும்
‘ஏர் இந்தியா’ நிறுவனத்தை வாங்குவதற்கான போட்டியில் ‘டாடா சன்ஸ்’ வெற்றி பெற்றிருக்கும் நிலையில், ஏர் இந்தியாவை டாடாவிடம் ஒப்படைக்கும் பணிகள் இன்னும் 10 வாரங்களில் முடிவடையும் என விமான போக்குவரத்து துறை செயலர் ராஜிவ் பன்சால் தெரிவித்துள்ளார்.
எப்படியும், அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள்ளாக ஏர் இந்தியா சம்பந்தமான அனைத்து விதமான நடைமுறைகளும் முற்றாக நிறைவு பெற்றுவிடும் என்கிறார்கள் அதிகாரிகள்.
உற்பத்தியை குறைத்த டொயோட்டா
ஜப்பானை சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனமான, ‘டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன்’ நவம்பர் மாதத்தில், உலகளவில் அதன் உற்பத்தியை 15 சதவீதம் அளவுக்கு குறைத்துக் கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது.
‘செமிகண்டக்டர் சிப்’ கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து, இந்த முடிவுக்கு நிறுவனம் வந்திருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|