‘மெட்ரோபோலிஸ்’ வசமாகிறது ‘ஹைடெக்’ ‘மெட்ரோபோலிஸ்’ வசமாகிறது ‘ஹைடெக்’ ...  மோட்டார் வாகன காப்பீடு சரிவு காணும் பொதுத்துறை மோட்டார் வாகன காப்பீடு சரிவு காணும் பொதுத்துறை ...
‘இந்தியாவின் சீர்திருத்தங்களை அமெரிக்கா வரவேற்றுள்ளது’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2021
19:17

வாஷிங்டன்:அண்மையில் இந்திய அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்களை, அமெரிக்க அதிபர் பைடனின் நிர்வாகமும், அமெரிக்காவில் உள்ள பெருநிறுவனங்களின் தலைவர்களும் வரவேற்றுஉள்ளதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டிருக்கும் நிர்மலா சீதாராமன், செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘‘அதிபர் பைடனின் அரசும், பெரு நிறுவனங்களின் தலைவர்களும், இந்திய அரசு மேற்கொண்ட பல சீர்திருத்தங்களை வரவேற்றுள்ளனர். ‘‘குறிப்பாக, முன் தேதியிட்ட வரி வசூலிக்கும் முறையை ரத்து செய்ததை வரவேற்றுள்ளனர்’’ என தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், மத்திய அரசு, நிறுவனங்களின் நீண்ட கால ஆதாயம் சம்பந்தமான முன்தேதியிட்ட வரி வசூலிப்பு முறையை நீக்குவதாக அறிவித்தது. இதற்கு பல தரப்பில் இருந்தும் வரவேற்பு கிடைத்துள்ளது. நிர்மலா சீதாராமன் இது குறித்து மேலும் கூறியதாவது:


முன்தேதியிட்ட வரி வசூலிப்பு முறையை நீக்குவதாக அறிவித்த இந்த முடிவு, சற்று காலம் தாழ்ந்து எடுக்கப்பட்டபோதிலும், பெரும்பாலான தொழிலதிபர்கள் இதை துணிச்சலான முடிவு என்றே தெரிவித்துள்ளனர். பல வழக்குகளில் முறையான தீர்வுகள் கிடைப்பதற்காக காத்திருந்தோம். சட்ட ரீதியாக தீர்வு கிடைத்தவுடன், பார்லியில் இந்த வரி வசூல் முறையை ரத்து செய்தோம்.


இப்படி இந்த சீர்திருத்தங்களை அறிவிப்பதற்கு முன்னதாக, இந்திய அரசுக்கு சட்ட ரீதியாக பல கட்டாயங்கள் இருந்ததை அவர்களிடம் எடுத்துரைத்தேன். இது மிகவும் ‘பாசிட்டிவ்’வான நடவடிக்கை என பலரும் வரவேற்றுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ‘‘இது குறித்தும் பேசப்பட்டது. இரு நாடுகளும் பேச்சு நடத்தி, விரைவாக இவ்விவகாரத்தை முடிக்க உள்ளோம்.

‘‘ஆனால், வர்த்தகம் குறித்தவற்றில் பெரிய பிரச்னைகள் உள்ளன. இது குறித்து, இந்திய வர்த்தக அமைச்சகம் அமெரிக்க வர்த்தக துறையுடன் இணைந்து பேசி வருகிறது. அதனால் இந்த விஷயத்தில் நான் முழுமையாக ஈடுபடவில்லை’’ என தெரிவித்தார்.


கொரோனா பாதிப்புக்கு பிறகு, முதன்முறையாக இப்போது அமெரிக்கா சென்றிருக்கிறார் நிர்மலா சீதாராமன். பன்னாட்டு நிதியம், உலக வங்கி ஆகியவற்றின் சந்திப்புகளில் கலந்து கொண்டதோடு, மேலும் பல நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டு வருகிறார். இவற்றின் போது, இந்தியாவின் பொருளாதார மீட்சி குறித்தும், நீண்ட கால சீர்திருத்தங்கள் குறித்த அரசின் உறுதிப்பாடு குறித்தும் விளக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)