பதிவு செய்த நாள்
16 அக்2021
19:21
புதுடில்லி:வங்கிகளால் வழங்கப்படும் சில்லரை கடன்கள் மற்றும் குறு,சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான கடன்களில் 50 சதவீதம், அடுத்த 2 –3 ஆண்டுகளில் டிஜிட்டல் கடன் வழங்கும் தளங்களுக்கு மாறும் என ‘யூனியன் பேங்க் ஆப் இந்தியா’வின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான ராஜ்கிரண் ராய் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:டிஜிட்டல் துறையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் வங்கிகளின் கடன் வழங்கும் செயல்பாட்டை பெரிதும் மாற்றி உள்ளது. இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில், சில்லரை கடன்கள் மற்றும் தொழில்களுக்கு வழங்கும் கடன்களில் 50 சதவீதம், டிஜிட்டல் வாயிலாக கடன் வழங்கும் தளத்துக்கு மாறிவிடும் என எதிர்பார்க்கிறேன்.
தற்போது வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் கடன் வழங்கும் தளங்களை விரும்புகிறார்கள். எனவே ஆன்லைனில் சேவைகளை வழங்கக்கூடிய தயாரிப்புகளை வங்கிகள் உருவாக்க வேண்டும்.துவக்கத்தில் நிதிதொழில்நுட்ப நிறுவனங்கள் வங்கிகளுக்கு போட்டியாக இருக்கும் என்றுதான் நினைத்தேன். ஆனால், அவை இப்போது வங்கிகளுக்கு உதவுவதாக இருக்கிறது.
இனி அவர்கள் நமக்கு போட்டியாளர்கள் அல்ல. அவர்களுடன் நாம் கூட்டு வைத்துக் கொள்ள வேண்டும். நிதிதொழில்நுட்ப நிறுவனங்கள், நிறைய தயாரிப்புகளை வங்கிகளுடன் சேர்ந்து உருவாக்கி உள்ளன.பொதுத்துறை வங்கிகள் தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளை கொண்டு வரக்கூடிய புதிய திறமைகளை இந்த அமைப்பில் இருந்து பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|