தரமற்ற ஹெல்மெட், குக்கர்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை தரமற்ற ஹெல்மெட், குக்கர்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை ...  வளர்ச்சி வலுவாக உள்ளது  ‘மூடிஸ்’ நிறுவனம் கணிப்பு வளர்ச்சி வலுவாக உள்ளது ‘மூடிஸ்’ நிறுவனம் கணிப்பு ...
கிரிப்டோ கரன்சிகளுக்கு அங்கீகாரம் 54 சதவீதம் பேர் விரும்பவில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2021
20:40

புதுடில்லி:இந்தியாவில் ‘கிரிப்டோ கரன்சி’களின் எதிர்காலம் குறித்து விரைவில் தீர்மானிக்கப்பட இருக்கும் நிலையில், டிஜிட்டல் சமூக தளமான ‘லோக்கல்சர்க்கிள்ஸ்’ ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இந்த ஆய்வில் பங்கேற்ற பொதுமக்களில் 54 சதவீதம் பேர், கிரிப்டோ கரன்சிகளை இந்தியாவில் சட்டப்பூர்வமாக்க விரும்பவில்லை என, தெரிவித்துள்ளனர். மாறாக, அவற்றை வெளிநாடுகளில் வைத்திருக்கும் சொத்துக்களாக கருத வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
லோக்கல் சர்க்கிள்ஸ் நிறுவனம், நாட்டில் உள்ள 342 மாவட்டங்களில், 56 ஆயிரம் நபர்களிடம் கிரிப்டோ கரன்சிகள் குறித்த ஆய்வை மேற்கொண்டது.இந்த ஆய்வில் 54 சதவீதம் பேர், கிரிப்டோ கரன்சிகளை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க விரும்பவில்லை.மேலும், அவற்றை வெளிநாட்டில் வைத்திருக்கும் சொத்துக்களாக கருதவேண்டும் என்றும், அவற்றுக்கு வரி வசூலிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் 26 சதவீதம் பேர், இத்தகைய நாணயங்கள் சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும் என்றும், அவற்றுக்கு வரி விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். 20 சதவீதம் பேரிடம் இது குறித்த கூற கருத்துகள் எதுவும் இல்லை. அத்துடன், 74 சதவீதம் பேர், இவற்றுக்கான விளம்பரங்களில் முதலீட்டு ‘ரிஸ்க்’ குறித்து போதுமான அளவில் அறிவுறுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
மக்களின் மனப்போக்கு குறித்து அறிந்துகொள்ள ஏதுவாக, இந்த ஆய்வு குறித்த முடிவுகளை மத்திய அரசு, பார்லி மென்ட், ரிசர்வ் வங்கி ஆகியவற்றுக்கு வழங்க இருப்பதாக, லோக்கல்சர்க்கிள்ஸ் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)