வெள்ளி இ.டி.எப்., திட்டம் ‘செபி’ விதிமுறைகள் வெளியீடு வெள்ளி இ.டி.எப்., திட்டம் ‘செபி’ விதிமுறைகள் வெளியீடு ...  அன்னிய நேரடி முதலீடு  ‘எக்ஸ்பிரஸ்’ வேகத்தில் அனுமதி அன்னிய நேரடி முதலீடு ‘எக்ஸ்பிரஸ்’ வேகத்தில் அனுமதி ...
மாநிலங்களின் மூலதன செலவு பின்தங்கியது தமிழக அரசு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2021
21:15

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், மூலதன செலவுகளை அதிகம் மேற்கொண்ட மாநிலங்களில் தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன.
அதேசமயம், அதிக மூலதன செலவுகளை மேற்கொள்ளக்கூடிய உத்தரபிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள், பட்ஜெட் தொகையில் ஐந்தில் ஒரு பங்கை கூட செலவழிக்காமல், பின்தங்கிய நிலையில் உள்ளன.இதன் காரணமாக, மாநிலங்களின் ஒட்டுமொத்த மூலதன செலவு, இக்காலகட்டத்தில் 28.4 சதவீதமாக குறைந்துள்ளது என, இது குறித்த தகவல்களை திரட்டிய, ‘கேர் ரேட்டிங்ஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்புகளை அடுத்து, தனியார் நிறுவனங்கள் இன்னும் அதிகளவில் மூலதன செலவுகளை மேற்கொள்ளாமல் இருக்கின்றன.இந்நிலையில், பொருளாதார மீட்சிக்கு உதவும் வகையில், அரசு தரப்பில் அதிகளவில் மூலதன செலவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.மத்திய அரசு இத்தகைய செலவுகளை தீவிரமாக மேற்கொண்ட போதிலும், மாநிலங்கள் பின்தங்கி உள்ளன என்பதும், கேர் ரேட்டிங்ஸ் அறிக்கையில் வாயிலாக தெரியவந்துள்ளது.
நடப்பு நிதியாண்டு மூலதன செலவுகளுக்கான மத்திய அரசின் பட்ஜெட், 5.54 லட்சம் கோடி ரூபாயாகும். இதில், 40 ஆயிரத்து, 374 கோடி ரூபாய் மாநிலங்களுக்கு கடனாக வழங்குவதும் அடக்கம். எனவே, மத்திய அரசின் நேரடி மூலதன செலவு பட்ஜெட் 5.13 லட்சம் கோடி ரூபாய். இதில், நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் 2.09 லட்சம் கோடி ரூபாயை, மத்திய அரசு செலவழித்துள்ளது. இது, இலக்கில் 41 சதவீதம் ஆகும்.
அதேசமயம், 24 மாநிலங்கள் 5.76 லட்சம் கோடி ரூபாய் இலக்கை நிர்ணயித்துள்ளன. ஆனால், இவை இதுவரை செலவழித்துள்ளது 1.64 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே. இது வெறும் 28.4 சதவீதம் ஆகும்.உத்தர பிரதேச மாநிலம் அதன் பட்ஜெட் இலக்கில் 20.8 சதவீதமே செலவழித்து உள்ள நிலையில், தெலுங்கானா 51.9 சதவீதம் செலவழித்துள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகா, பீஹார், குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் மிகவும் பின்தங்கி உள்ளன என்றும் கேர் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.பொருளாதார மீட்சிக்கு உதவும் வகையில், அரசு தரப்பில் அதிகளவில் மூலதன செலவுகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில், மத்திய அரசு தீவிரமாக இருந்தாலும், பல மாநில அரசுகள் மந்தமாகவே செயல்படுகின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)