‘ஆன்லைனில்’ மருந்து வணிகம் அப்பல்லோ – அமேசான் பேச்சு ‘ஆன்லைனில்’ மருந்து வணிகம் அப்பல்லோ – அமேசான் பேச்சு ...   ஆயிரம் சந்தேகங்கள் :வங்கியில் கொடுக்கும் கே.ஒய்.சி., பாதுகாப்பாக இருக்குமா? ஆயிரம் சந்தேகங்கள் :வங்கியில் கொடுக்கும் கே.ஒய்.சி., பாதுகாப்பாக ... ...
எலான் மஸ்க் நிறுவனத்துக்கு தடை பொதுமக்களுக்கு அரசு எச்சரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2021
20:40

புதுடில்லி:இந்தியாவில், செயற்கைக்கோள் அடிப்படையிலான ‘பிராட்பேண்டு’ இணைய சேவைகளை வழங்க, எலான் மஸ்க் தலைமையிலான ‘ஸ்டார்லிங்க்’ நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்படவில்லை என, தொலைதொடர்பு துறை தெரிவித்துள்ளது.
மேலும், இந்நிறுவனத்தால் விளம்பரப்படுத்தப்படும் சேவைகளை பெறுவதற்கு, பொதுமக்கள் முன்பதிவு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையில் நடைபெற்று வரும் ஸ்டார்லிங்க் நிறுவனம், அதிவேகமான பிராட்பேண்டு சேவையை, செயற்கைக்கோள் வாயிலாக வழங்கி வருகிறது.
இந்தியாவிலும் இத்தகைய சேவையை வழங்க இருப்பதாக கூறி, அதற்காக முன்பதிவு செய்துகொள்ளுமாறு விளம்பரம் செய்து வருகிறது.இதையடுத்து, இந்த சேவையை பெறுவதற்காக 5 ஆயிரம் பேருக்கும் மேல் முன்பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில், இத்தகைய பிராட்பேண்டு சேவையை இந்தியாவில் வழங்க, ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்படவில்லை என, தொலைதொடர்பு துறை தெரிவித்துள்ளது.
அத்துடன், ஒழுங்குமுறை விதிகளின் படி இயங்குமாறு, ஸ்டார்லிங்க் நிறுவனத்தை, இத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. கூடவே முன்பதிவுகளை உடனடியாக நிறுத்துமாறும், உரிய அனுமதிகளை பெற்ற பின், சேவைகளை வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்தியாவில் அடுத்த ஆண்டு டிசம்பரிலிருந்து, செயற்கைக்கோள் வாயிலாக, பிராட்பேண்டு சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. ஆனால் இதுவரை இதற்கான உரிமம் எதையும் இந்நிறுவனம் பெறவில்லை.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)