பதிவு செய்த நாள்
30 நவ2021
19:59
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் ஜூலை --– செப்டம்பர் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது.இதற்கு உற்பத்தி அதிகரிப்பு, சேவைகள் துறையில் தேவை அதிகரிப்பு, கடந்த ஆண்டின் குறைந்த அடிப்படை மற்றும் தடுப்பூசி போடுவது அதிகரித்தது ஆகியவை முக்கிய காரணங்களாக அமைந்தன என, மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், வளர்ச்சி 20.1 சதவீதமாக இருந்தது. இதுவே, இதற்கு முந்தைய ஆண்டில், கொரோனா பாதிப்புகள் காரணமாக, நாட்டின் பொருளாதாரம் மைனஸ் 24.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய 8 துறைகள்
நாட்டின் முக்கிய 8 துறைகள், கடந்த அக்டோபரில் 7.5 சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ளன. நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள், உரம், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகியவை, முக்கிய 8 துறைகளாக கருதப்படுகிறது. இவை, நாட்டின் தொழில் துறை உற்பத்தியை கணக்கிடுவதில், 40.27 சதவீத பங்களிப்பை கொண்டு உள்ளன.கடந்த செப்டம்பரில், இந்த 8 துறைகளின் வளர்ச்சி 4.5 சதவீதமாக இருந்தது. நடப்பாண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில், உற்பத்தி வளர்ச்சி 15.1 சதவீதமாக உள்ளது. இதுவே, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில், மைனஸ் 12.6 சதவீதமாக சரிவைக் கண்டிருந்தது என, மத்திய வர்த்தம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிதிப் பற்றாக்குறை
கடந்த அக்டோபர் வரையிலான காலத்தில், மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை, நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் இலக்கில், 36.3 சதவீதமாக குறைந்து உள்ளது. இதற்கு வருவாய் வசூலில் முன்னேற்றம் இருந்தது காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில்லரை விலை பணவீக்கம்
தொழிற்சாலை ஊழியர்களுக்கான சில்லரை விலை பணவீக்கம், அக்டோபர் மாதத்தில் சற்று அதிகரித்து, 4.5 சதவீதமாக உள்ளது. கடந்த செப்டம்பரில் இது 4.41 சதவீதமாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|