பதிவு செய்த நாள்
01 டிச2021
21:54
புதுடில்லி,:எல்.ஐ.சி., நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதை அடுத்து, பாலிசிதாரர்கள் ‘பான்’ எண்ணை அப்டேட் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., விரைவில் புதிய பங்கு வெளியீட்டுக்கு வர உள்ளது.இந் நிலையில், அதன் பங்குகளை வாங்குவதற்கு ஏதுவாக, பாலிசிதாரர்கள் அவர்களின் பான் எண்ணை அப்டேட் செய்துகொள்ளுமாறு இந்நிறுவனம் கேட்டுக்கொண்டு உள்ளது.
தற்போதைய திட்டப்படி, எல்.ஐ.சி., நிறுவனம், பங்கு வெளியீட்டின் போது அதில் 10 சதவீத பங்குகளை பாலிசிதாரர்களுக்காக ஒதுக்கி வைத்துள்ளது.இதைத் தொடர்ந்தே இந்த பங்கு வெளியீட்டில் பங்கேற்க விரும்பும் பாலிசிதாரர்கள், அவர்களுடைய பான் எண்ணை அப்டேட் செய்துகொள்ளுமாறு எல்.ஐ.சி., கேட்டுக் கொண்டுள்ளது.
பொதுவாக இத்தகைய புதிய பங்கு வெளியீட்டில் பங்கேற்பவர்கள், ஆவணங்களில் அவர்களது பான் எண்ணை அப்டேட் செய்து கொண்டிருக்க வேண்டும்.அத்துடன், தகுதி வாய்ந்த ‘டிமேட்’ கணக்கும் இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.இந்த நிதியாண்டின் இறுதிக்குள்ளாக, எல்.ஐ.சி., நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|