பதிவு செய்த நாள்
07 டிச2021
20:56
மும்பை:ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, ‘பிளிப்கார்ட்’ வலைதளம் வாயிலாக பல்வேறு பொருட்களை விற்பனை செய்வோருக்கு, 25 லட்சம் ரூபாய் வரை குறுகிய கால மிகைப் பற்று கடன் வசதி வழங்குவதாக தெரிவித்துள்ளது.
பிளிப்கார்ட் வலைதளத்தில் ஏராளமான தொழில் முனைவோர் பதிவு செய்து, தாங்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.இவர்களுக்கு, விற்பனை செய்த பொருட்களுக்கு உரிய தொகை, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகே கிடைக்கும். இதனால், பலர் நடைமுறை மூலதனத் தேவையை சமாளிக்க முடியாமல், தொடர்ந்து உற்பத்தியை மேற்கொள்ள இயலாமல் தவிக்கின்றனர்.
இத்தகையோரின் சிரமத்தை போக்கும் வகையில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, பிளிப்கார்ட்டில் பதிவு செய்துள்ள விற்பனையாளர்களுக்கு, 25 லட்சம் ரூபாய் வரை மிகைப் பற்று கடன் வசதி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. விற்பனை மதிப்பிற்கு ஏற்ப மிகைப் பற்று கடன் வசதியை அவரவர் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் தொழில் முனைவோர் உற்பத்தி பாதிப்பின்றி தொழிலை தொடர முடியும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|