வருமான வரி கணக்கு தாக்கல்  வழி காட்டுகிறது ‘டேக்ஸ்2வின்’ வருமான வரி கணக்கு தாக்கல் வழி காட்டுகிறது ‘டேக்ஸ்2வின்’ ...  ஸ்பைஸ்ஜெட் சொத்துக்களை முடக்க கோர்ட் உத்தரவு ஸ்பைஸ்ஜெட் சொத்துக்களை முடக்க கோர்ட் உத்தரவு ...
‘செபி’ கண்காணிப்பில் ‘கிரிப்டோகரன்சி’மத்திய நிதியமைச்சகம் பரிசீலனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2021
21:03

புதுடில்லி:வலைதளத்தில் புழங்கும் ‘கிரிப்டோகரன்சி’ எனும் மெய்நிகர்நாணய சந்தையை கண்காணிக்கும் பொறுப்பை, ‘செபி’யிடம் வழங்குவது குறித்து மத்திய நிதியமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வலைதளங்களில் ‘பிட்காய்ன், எதிரியம்’ போன்ற மெய்நிகர் நாணயங்களில் ஏராளமானோர் முதலீடு செய்து வருகின்றனர்.ரிசர்வ் வங்கி போல இந்த மெய்நிகர் நாணயங்களை கண்காணிக்க எந்த அமைப்பும் இல்லை. அதனால், இச்சந்தை, சட்ட விரோத பணப் பரிமாற்றம், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி போன்ற சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுவதாக புகார் உள்ளது.
மெய்நிகர் கரன்சிகளை அங்கீகரிக்க மறுக்கும், ரிசர்வ் வங்கி, இந்தியாவுக்கென ‘டிஜிட்டல் கரன்சி’யை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.இதையடுத்து அனைத்து தனியார் மெய்நிகர் கரன்சிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவெடுத்து அதற்கான, வரைவு மசோதாவை தயாரித்துள்ளது.
அத்துடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் பேசும் போது ‘‘பிட்காய்ன் போன்ற எந்தவொரு தனியார் மெய்நிகர் நாணயத்தையும் அரசு அங்கீகரிக்காது,’’ என்றார்.

இந்நிலையில், மெய்நிகர் நாணய சந்தைகள் வாயிலாக கிடைக்கும் வரி வருவாயை கருதி, அவற்றுக்கு தடை விதிக்கும் வரைவு மசோதாவில் சில திருத்தங்கள் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:புதிய வரைவு மசோதாவில், ஏற்கனவே மெய்நிகர் நாணயங்களில் முதலீடு செய்துள்ளோர் பாதிக்காத வகையில் திருத்தங்கள் செய்யப்படும். நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் இந்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதலீட்டாளர்கள், மெய்நிகர் நாணயங்களில் செய்துள்ள முதலீடுகள் தொடர்பான விபரங்களை முழுமையாக வெளியிட ‘கெடு’ விதிக்கப்படும்;
அவர்களை புதிய விதிமுறைகளின் கீழ் கொண்டு வர வசதியாக, மசோதாவில் திருத்தங்கள் செய்யப்படும்.விதிமீறலுக்கு 20 கோடி ரூபாய் அபராதம் அல்லது ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
‘கிரிப்டோகரன்சி’ என்ற சொல், ‘கிரிப்டோஅசெட்ஸ்’ என, அதாவது நிதிச் சொத்துக்கள் ஆக மாற்றப்படும் என தெரிகிறது. நிதிச் சொத்துக்களில் சிறிய முதலீட்டாளர்களை பாதுகாக்கும் வகையில், குறைந்தபட்ச முதலீடு தொடர்பான விதிமுறையை வரைவு மசோதாவில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய நிதிச் சொத்துக்களின் சந்தையை கண்காணிக்கும் பொறுப்பு, ‘செபி’ எனப்படும் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பிடம் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)