பொருளாதார வளர்ச்சி குறித்து இந்திய வணிகங்கள் நம்பிக்கை பொருளாதார வளர்ச்சி குறித்து இந்திய வணிகங்கள் நம்பிக்கை ...  அபார வளர்ச்சி கண்ட ஆயத்த ஆடை ஏற்றுமதி அபார வளர்ச்சி கண்ட ஆயத்த ஆடை ஏற்றுமதி ...
‘ஸ்டார்ட்அப்’ நிறுவனங்கள் ரூ. 3.11 லட்சம் கோடிதிரட்டி சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜன
2022
21:52

புதுடில்லி:இந்திய ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், கடந்த ஆண்டில் மட்டும் 3.11 லட்சம் கோடி ரூபாயை திரட்டி உள்ளன. இதற்கு முந்தைய ஆண்டில், 85 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்பட்டிருந்த நிலையில், இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து, ‘ஓரியோஸ் வெஞ்சர்ஸ் பார்ட்னர்ஸ்’ நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுஉள்ளதாவது:கடந்த ஆண்டில் மட்டும், இந்தியாவில் 46 யுனிகார்ன் நிறுவனங்கள் உருவாகி உள்ளன. இதைஅடுத்து, இந்தியாவில் உள்ள மொத்த யுனிகார்ன் நிறுவனங்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.

ஒரு பில்லியன் டாலர், அதாவது 7,400 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் யுனிகார்ன் அந்தஸ்து பெற்றவையாக கருதப்படும்.உலகளவில் அதிக யுனிகார்ன் நிறுவனங்கள் கொண்ட நாடுகள் பட்டியலில், இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
முதல் இடத்தில் அமெரிக்கா 487 நிறுவனங்களுடனும், சீனா 301 நிறுவனங்களுடனும் உள்ளன. பிரிட்டனில் 39 நிறுவனங்களே உள்ளன.இந்தியாவில் மொத்தம் 60 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன.உலகில் உருவாகும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 13ல் ஒன்று, இந்தியாவிலிருந்து வருபவை ஆகும்.
இந்தியாவில் 10 பில்லியன் டாலர் அதாவது 74 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட ‘டெக்காகார்ன்’ நிறுவனங்கள் மட்டுமே 10 உள்ளன.புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, கடந்த ஆண்டில் மட்டும் 11 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், 53 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை திரட்டி உள்ளன.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)