பதிவு செய்த நாள்
19 ஜன2022
23:20
புதுடில்லி:ரிலையைன்ஸ் ஜியோ நிறுவனம், ‘பிக்ஸட் லைன் பிராட்பேண்டு’ சேவையில், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தை முதன் முறையாக பின்னுக்குத் தள்ளியுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக, பிக்ஸட் லைன் பிராட்பேண்டு சேவையை வழங்குவதில் முன்னணியில் இருந்த பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தை, இந்த சேவையை துவங்கிய இரண்டே ஆண்டுகளில், ரிலையன்ஸ் ஜியோ பின்னுக்குத் தள்ளி உள்ளது.தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’ தரவுகளின் படி, கடந்த நவம்பரில் 43.4 லட்சம் வாடிக்கையாளர்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளது, ரிலையன்ஸ் ஜியோ.
அக்டோபரில் இதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 41.6 லட்சமாக இருந்தது. பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, அக்டோபரில் 47.2 லட்சமாக இருந்த நிலையில், நவம்பரில் 42 லட்சமாக சரிவைக் கண்டுள்ளது.இதனையடுத்து, இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது பி.எஸ்.என்.எல்., நிறுவனம்.
பார்தி ஏர்டெல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 40.8 லட்சமாக உள்ளது.ஜியோ நிறுவனம், அதன் ‘ஜியோபைபர்’ எனும் பிக்ஸட் லைன் பிராட்பேண்டு சேவையை, கடந்த 2019 செப்டம்பரில் துவங்கியது. இந்த சமயத்தில் பி.எஸ்.என்.எல்., பிராட்பேண்டு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 86.9 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|