வருமான வரி விலக்கு வரம்பு உயருமா? வருமான வரி விலக்கு வரம்பு உயருமா? ...  மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் வட்டி கிடைக்குமா? மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் வட்டி கிடைக்குமா? ...
பட்ஜெட் எதிர்பார்ப்பும் தனி நபர் திட்டமிடலும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2022
22:38

ஒவ்வொரு ஆண்டு போலவே எதிர்வரும் மத்திய பட்ஜெட் பரவலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ள திட்டங்கள், வரிச் சலுகைகள் குறித்த எதிர்பார்ப்புகளும் பரவலாக விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. பல்வேறு துறையினர் பட்ஜெட் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை கவனத்தில் கொண்டுள்ள நிலையில், பொதுமக்களும் பட்ஜெட் அறிவிப்புகளை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர்.

எனினும் தனிநபர்கள் தங்கள் நிதி முடிவுகளுக்கு, பட்ஜெட்டிற்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நிதி வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர். தனிநபர் நிதி நோக்கில் பட்ஜெட்டை எப்படி அணுக வேண்டும் என பார்க்கலாம்.

பட்ஜெட் ஆர்வம்:

நாட்டின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது முக்கிய நிகழ்வு தான். பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் முக்கிய அம்சங்களை தெரிந்து கொள்வதும் அவசியம். எனினும் பட்ஜெட்டை மனதில் கொண்டு, முதலீடு முடிவுகளை மேற்கொள்வதை அல்லது தள்ளிப் போடுவதை தவிர்க்க வேண்டும் என்று நிதி வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.

பட்ஜெட் தாக்கம்:


பட்ஜெட்டில் இடம்பெறக்கூடிய அம்சங்கள் தனிநபர்கள் மீது தாக்கம் செலுத்தலாம் என்றாலும், முதலீடு, சேமிப்பு அம்சங்கள் மீது நேரடி தாக்கம் அதிகம் இல்லை என்கின்றனர். பட்ஜெட் அறிவிப்பை எதிர்பார்த்து, நிதி திட்டமிடலை தீர்மானிப்பது, தேவையில்லாத தாமதத்திற்கு வழிவகுக்கும்.

மாற்றம் தேவையா?

ஏற்கனவே நிதி திட்டமிடலை மேற்கொண்டுள்ளவர்களும், பட்ஜெட் அறிவிப்புகளால் திட்டமிடலில் பெரிய அளவில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வரி தொடர்பான அறிவிப்புகள் இருந்தால், அதற்கேற்ப சிறிய மாற்றங்கள் மட்டுமே தேவைப்படும்.

நிதி இலக்குகள்:


பட்ஜெட் அறிவிப்புகளை விட, நிதி இலக்குகளே தனிநபர்களுக்கான வழிகாட்டுதலாக அமைய வேண்டும். போதுமான அளவு சேமிக்கிறோமா; சரியான முறையில் முதலீடு செய்துள்ளோமா? போன்ற கேள்விகளே முதலீட்டாளர்களுக்கு முக்கியமானவை. முதலீடு தொகுப்பின் தன்மையையும் கவனிக்க வேண்டும். பட்ஜெட் தொடர்பான மிகை பரபரப்பை தவிர்க்க வேண்டும்.

புதிய முதலீடுகள்:

பட்ஜெட் என்பது ஆண்டுக்கான வரவு – செலவு கணக்கு என்பதோடு, அதில் வெளியாகும் அம்சங்கள் தனிநபர்களின் கட்டுப்பாட்டில் இல்லாதவை. எனவே, அவை பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. மாறாக தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அம்சங்களில் கவனம் செலுத்தினால், நிதி இலக்குகளை நோக்கி முன்னேறலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)