பதிவு செய்த நாள்
26 ஜன2022
21:44
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் சில்லரை விற்பனை நிறுவனமான ‘இதாஸ்’ புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.
இந்த பங்கு வெளியீட்டின்போது, 400 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும்; நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் 11.08 லட்சம் பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியை கொண்டு, கடனை திருப்பி அடைக்கவும், நடைமுறை மூலதன தேவைகளுக்காகவும், புதிய கடைகளை திறப்பதற்காகவும் பயன்படுத்த, இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில், இந்நிறுவனத்தின் வருவாய் 387 கோடி ரூபாயாக உள்ளது. நிகர லாபம் 6 கோடி ரூபாய்.இந்நிறுவனம் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட ஆடம்பர வாட்சு பிராண்டுகளை விற்பனை செய்து வருகிறது.
இந்தியாவில், ஆடம்பர வாட்சுகள் சில்லரை விற்பனை சந்தையில், இந்நிறுவனம் 20 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. 17 நகரங்களில், 50 கடைகள் இதற்கு உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|