பதிவு செய்த நாள்
27 ஜன2022
21:38
புதுடில்லி:எதிர்காலத்தில், மின்சார வாகனங்களுக்கான மிகப் பெரிய சந்தையாக இந்தியா இருக்கும். எனவே, எங்கள் நிறுவனம் இப்பிரிவில் இறங்குவது குறித்த சாத்திய கூறுகளை ஆராய்ந்து வருகிறது என, ‘நிஸான்’ மோட்டார் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி அஷ்வனி குப்தா கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:எதிர்காலத்தில், மின்சார வாகனங்களுக்கான ஒரு மிகப் பெரிய சாத்தியமான சந்தையாக இந்தியா இருக்கும். அதனால் ‘ரெனோ, நிஸான், மிட்சுபிஷி’ ஆகிய வாகன தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டணி, இந்தியாவில், இப்பிரிவில் நுழைவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து வருகிறது.
எங்கள் கூட்டணி, 2030ம் ஆண்டிற்குள் 35 புதிய மின்சார கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.இந்தியாவில் நிச்சயமாக மின்சார வாகன பிரிவில் பங்கெடுத்துக் கொள்வோம். ஆனால், அதற்கு முன்னதாக தயாரிப்பு, போட்டி, சூழல் போன்றவை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு, அறிய விரும்புகிறோம்.
இன்னும் ஓராண்டில், இந்தியாவின் மின்சார வாகன சந்தை மூன்று மடங்கு வளர்ச்சியை காணும். அத்துடன், மிகப் பெரிய சந்தையாகவும் இந்தியா மாறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|