பங்குச் சந்தை சரிவு: ரூ.3 லட்சம் கோடி இழப்பு பங்குச் சந்தை சரிவு: ரூ.3 லட்சம் கோடி இழப்பு ...  வாராக் கடன் வங்கி செயல்பட தயார் வாராக் கடன் வங்கி செயல்பட தயார் ...
வர்த்தக துளிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2022
21:54

வருமான வரி ரீபண்டு
நடப்பு நிதியாண்டில், இதுவரை 1.62 லட்சம் கோடி ரூபாய் வருமான வரி ரீபண்டாக வழங்கப்பட்டுள்ளதாக, வருமான வரி துறை தெரிவித்து உள்ளது.வருமான வரி செலுத்திய 1.79 கோடி பேருக்கு இந்த தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், வருமான வரி துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பங்குகளின் மதிப்பு
டி.சி.ஐ.எல்., நிறுவனத்தில், அரசின் வசம் இருக்கும் 30 சதவீத பங்குகளின் மதிப்பு 8,900 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.எஸ்.பி.ஐ., கேபிட்டல் வகுத்தளித்த பார்முலாவின் படி இவ்வாறு மதிப்பிடப்பட்டுள்ளது.இந்நிறுவனத்தில், பார்தி ஏர்டெல் நிறுவனம் 70 சதவீதம் பங்குகளையும்; மத்திய அரசு 30 சதவீத பங்குகளையும் வைத்துள்ளன.
‘5ஜி’ ஆராய்ச்சிக்காக கூட்டு‘
லார்சன் டூப்ரோ இன்போடெக்’ நிறுவனம், ‘5ஜி’ தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்காக, ஐ.ஐ.டி.,மெட்ராஸ் உடன் இணைந்து உள்ளது.கிராமப்புற பகுதிகளில், குறைந்த விலையில், குறைந்த அலைவரிசையில், 5ஜி சேவைகளை சிறப்பாக வழங்குவது குறித்த ஆய்வுகளை, இவ்விரு நிறுவனங்களும் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று சக்கர மின் வாகனம்

‘மகிந்திரா எலக்ட்ரிக் மொபிலிட்டி’ நிறுவனம், புதிதாக ‘இ – ஆல்பா கார்கோ’ எனும் மூன்று சக்கர மின்சார வாகனத்தை அறிமுகம் செய்து உள்ளது.இந்த மூன்று சக்கர மின்சார வாகனத்தின் டில்லி எக்ஸ்ஷோரூம் விலை 1.44 லட்சம் ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அலுமினிய இறக்குமதி வரி
உள்நாட்டில் அலுமினிய ஸ்கிராப் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், இவற்றுக்கான இறக்குமதி வரியை 10 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என, இந்திய அலுமினிய சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.தற்போது அலுமினிய ஸ்கிராப்புகளுக்கு 2.5 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதை 10 சதவீதமாக அதிகரிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)