பதிவு செய்த நாள்
27 ஜன2022
21:54
வருமான வரி ரீபண்டு
நடப்பு நிதியாண்டில், இதுவரை 1.62 லட்சம் கோடி ரூபாய் வருமான வரி ரீபண்டாக வழங்கப்பட்டுள்ளதாக, வருமான வரி துறை தெரிவித்து உள்ளது.வருமான வரி செலுத்திய 1.79 கோடி பேருக்கு இந்த தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், வருமான வரி துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பங்குகளின் மதிப்பு
டி.சி.ஐ.எல்., நிறுவனத்தில், அரசின் வசம் இருக்கும் 30 சதவீத பங்குகளின் மதிப்பு 8,900 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.எஸ்.பி.ஐ., கேபிட்டல் வகுத்தளித்த பார்முலாவின் படி இவ்வாறு மதிப்பிடப்பட்டுள்ளது.இந்நிறுவனத்தில், பார்தி ஏர்டெல் நிறுவனம் 70 சதவீதம் பங்குகளையும்; மத்திய அரசு 30 சதவீத பங்குகளையும் வைத்துள்ளன.
‘5ஜி’ ஆராய்ச்சிக்காக கூட்டு‘
லார்சன் டூப்ரோ இன்போடெக்’ நிறுவனம், ‘5ஜி’ தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்காக, ஐ.ஐ.டி.,மெட்ராஸ் உடன் இணைந்து உள்ளது.கிராமப்புற பகுதிகளில், குறைந்த விலையில், குறைந்த அலைவரிசையில், 5ஜி சேவைகளை சிறப்பாக வழங்குவது குறித்த ஆய்வுகளை, இவ்விரு நிறுவனங்களும் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று சக்கர மின் வாகனம்
‘மகிந்திரா எலக்ட்ரிக் மொபிலிட்டி’ நிறுவனம், புதிதாக ‘இ – ஆல்பா கார்கோ’ எனும் மூன்று சக்கர மின்சார வாகனத்தை அறிமுகம் செய்து உள்ளது.இந்த மூன்று சக்கர மின்சார வாகனத்தின் டில்லி எக்ஸ்ஷோரூம் விலை 1.44 லட்சம் ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அலுமினிய இறக்குமதி வரி
உள்நாட்டில் அலுமினிய ஸ்கிராப் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், இவற்றுக்கான இறக்குமதி வரியை 10 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என, இந்திய அலுமினிய சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.தற்போது அலுமினிய ஸ்கிராப்புகளுக்கு 2.5 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதை 10 சதவீதமாக அதிகரிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|