ஏர்டெல் நிறுவனத்தில் கூகுள் ரூ.7,500 கோடி முதலீடு ஏர்டெல் நிறுவனத்தில் கூகுள் ரூ.7,500 கோடி முதலீடு ...  வெளிப்படையான லாபமே நிறுவனத்தை தக்க வைக்கும் வெளிப்படையான லாபமே நிறுவனத்தை தக்க வைக்கும் ...
எல்.ஐ.சி., நிறுவன பங்குகள் மார்ச் 31ல் பட்டியலிடப்படும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜன
2022
22:11

புதுடில்லி:நாட்டின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.,யின் பங்குகள், மார்ச் 31ம் தேதியன்று பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும் என, முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை செயலர் துஹின் காந்தா பாண்டே தெரிவித்துள்ளார்.
பட்டியல்
மேலும் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான விண்ணப்பம் குறித்த விஷயங்கள் இறுதி செய்யப்பட்டு, விரைவில் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:எல்.ஐ.சி.,யின் பங்குகள், மார்ச் 31ம் தேதியன்று பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும். அதற்கு முன், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான விண்ணப்பம் இறுதி செய்யப்பட்டு, விரைவில் செபிக்கு அனுப்பி வைக்கப்படும்.
எல்.ஐ.சி., நிறுவனத்தின் பங்கு விலக்கல் வாயிலாக பெறப்படும் தொகை, நடப்பு நிதியாண்டு கணக்கில் சேர்க்கப்படும். அதற்காகவே, மார்ச் 31ம் தேதிக்குள் பங்கு விலக்கல் நடவடிக்கைகளை முடிக்க திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நடப்பு நிதியாண்டுக்கான பங்கு விலக்கல் இலக்கை எட்டுவதற்கு, எல்.ஐ.சி., நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் பட்டியலிடப்படுவது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.நடப்பு நிதியாண்டில், பங்கு விலக்கல் இலக்காக 1.75 லட்சம் கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எல்.ஐ.சி., நிறுவனத்தின் பங்கு விலக்கல் வாயிலாக, 1 லட்சம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
நடவடிக்கை
நடப்பு நிதியாண்டில் இதுவரை 9,330 கோடி ரூபாய் பொதுத்துறை நிறுவனங்களில் இருந்த சிறுபான்மை பங்குகளை விற்றதன் வாயிலாக திரட்டப்பட்டுள்ளது.இதற்கு முந்தைய நிதியாண்டில் 32 ஆயிரத்து 835 கோடி ரூபாய், பங்கு விலக்கல் நடவடிக்கை வாயிலாக திரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)