பதிவு செய்த நாள்
07 மே2022
16:38
ஐகானிக் பாத்வேர் பிராண்டான 'ஹிண்ட்வேர்', ஹிண்ட்வேர் இத்தாலிய டைல்ஸ் மூலம் டைல்ஸ் பிரிவில் அதன் விரிவாக்கத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனம் ராஜ்புராவில் (பஞ்சாப்) ஒரு நிலையத்தைத் திறந்து, இந்தியா முழுவதும் இதுபோன்ற 18 நிலையங்களை திறக்கப்போவதாக அறிவித்துள்ளது.
தற்போது, இந்நிறுவனம் 259 நகரங்களில் அதன் இருப்பைக் கொண்டு, பாத்வேர் நிறுவனங்களுக்கு மத்தியில் பரவலான மிகப்பெரிய நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது. வடக்கு சந்தைக்கு வழங்கும் வகையில், ராஜ்புராவில் உள்ள நிலையமானது பஞ்சாப், ஹிமாச்சல், ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியானாவின் சில பகுதிகளில் விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு சேவையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையங்கள் தேவையை விரைவாக சமாளிக்க வர்த்தகத்திற்கு உதவும். ஹிண்ட்வேர் இத்தாலிய டைல்ஸ் மூலம் டைல்ஸ் பிரிவில் இந்த விரிவாக்கத்தின் மூலம், நிறுவனம் அனைத்து பாத்வேர் மற்றும் சானிடரிவேர் தீர்வுகளையும் ஒரே இடத்தில் வழங்கும், என ஹிண்ட்வேர் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|