பதிவு செய்த நாள்
07 மே2022
19:47
புதுடில்லி:நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம், கடந்த ஆண்டு, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில், 8.7 சதவீதமாக குறைந்து உள்ளதாக, மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, மேலும் அறிவித்துள்ளதாவது:நாட்டின் நகர பகுதிகளில், 15 வயதுக்கு மேற்பட்டவர்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம், கடந்த ஆண்டு 8.7 சதவீதமாக குறைந்து உள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டில் 10.3 சதவீதமாக இருந்தது. கடந்த 2020ம் ஆண்டின் டிசம்பர் காலாண்டில், வேலை வாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து இருந்ததற்கு, கொரோனா பரவல் தொடர்பாக விதிக்கப்பட்டிருந்த தடைகள் முக்கிய காரணமாக அமைந்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் காலாண்டில், பெண்களிடையே வேலை வாய்ப்பின்மை விகிதம் 10.5 சதவீதமாக குறைந்து உள்ளது. ஆண்களை பொறுத்தவரை, 8.3 சதவீதமாக உள்ளது.தற்போது கொரோனா தடைகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருவதால், பொருளாதார செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, வேலை வாய்ப்பும் அதிகரிக்க துவங்கி உள்ளன.இவ்வாறு, மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|