98 கோடி ரூபாயில்  ‘டாடா’ சந்திரசேகரன் வீடு 98 கோடி ரூபாயில் ‘டாடா’ சந்திரசேகரன் வீடு ...  ஆ்யிரம் சந்தேகங்கள் எல்.ஐ.சி., நிறுவனத்தின் பங்குகளை  பட்டியலிடப்பட்ட பின் வாங்கலாமா? ஆ்யிரம் சந்தேகங்கள் எல்.ஐ.சி., நிறுவனத்தின் பங்குகளை பட்டியலிடப்பட்ட ... ...
பங்குகளை விற்று கடனை சமாளிக்க முயற்சிக்கும் ‘பியூச்சர்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2022
19:55

புதுடில்லி:கடனில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் ‘பியூச்சர்’ குழுமம், தன்னிடம் உள்ள, ‘அமர் சித்ரா கதா காமிக்ஸ்’ நிறுவனத்தின் 18.6 சதவீத பங்குகளை, விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
இப்பங்குகளை, பியூச்சர் குழுமம், கிட்டத்தட்ட 13.62 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.இப்பங்குகளை, ராமாநாயுடு டகுபதி மற்றும் ‘ஸ்பிரிட் மீடியா’வுக்கு விற்பனை செய்ய உள்ளது. பியூச்சர் குழுமத்தின் அங்கமான, ‘பியூச்சர் கன்ஸ்யூமர்’ நிறுவனம் வசம் இருந்து, இந்த பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன.
பியூச்சர் குழுமத்தை சேர்ந்த பல நிறுவனங்கள், தங்கள் வசம் இருக்கும் பிற நிறுவன முதலீடுகளை, விற்பனை செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளன.கடந்த வியாழனன்று, ‘பியூச்சர் எண்டர்பிரைசஸ்’ நிறுவனம், ‘பியூச்சர் ஜெனரலி இந்தியா இன்சூரன்ஸ்’ கம்பெனியின் 25 சதவீத பங்குகளை, 1,266 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.
பியூச்சர் குழுமத்தின் சில்லரை வணிகத்தை, ‘ரிலையன்ஸ் ரீட்டெய்ல்’ நிறுவனம், 24 ஆயிரத்து 713 கோடி ரூபாய்க்கு வாங்க முன்வந்த நிலையில், ‘அமேசான்’ இதை எதிர்த்து பல்வேறு வழக்குகளை தொடர்ந்தது.இதையடுத்து, ஒரு கட்டத்தில், ரிலையன்ஸ் ரீட்டெய்ல், பியூச்சர் சில்லரை வணிகத்தை வாங்கும் திட்டத்தை கைவிட்டு விட்டதாக அறிவித்து விட்டது.இதன் தொடர்ச்சியாக பியூச்சர் குழுமம் கடுமையான கடன் அழுத்தத்தை சந்தித்து வருகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)