‘பிர்லா டயர்ஸ்’ மீது திவால் நடவடிக்கை ‘பிர்லா டயர்ஸ்’ மீது திவால் நடவடிக்கை ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
கார் சவாரி ரத்து புகார்கள் களமிறங்கியது மத்திய அரசு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2022
06:11

புதுடில்லி,–‘ஓலா, ஊபர்’ போன்ற வாடகை கார் சேவை நிறுவனங்கள் மீது, நுகர்வோர் தரப்பிலிருந்து புகார்கள் அதிகளவில் வருவதை அடுத்து, இந்நிறுவனங்களுடன் அரசு இன்று பேச்சு நடத்த உள்ளது.இந்த பேச்சின் போது, கட்டணத்தை கணக்கிடுவது, சவாரி ரத்தாவது, நுகர்வோர் தரவு பாதுகாப்பு போன்றவை குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளதாக, நுகர்வோர் விவகாரத் துறை செயலாளர் ரோஹித் குமார் சிங் கூறியுள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:வாடகை கார்களுக்கான தளங்கள், நியாயமற்ற வர்த்தகத்தில் ஈடுபடுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, சவாரி ரத்து செய்வது குறித்த புகார்கள் அதிகரித்துள்ளன.முன்பதிவுகளை ஏற்றுக்கொண்ட பிறகு, பயணங்களை ரத்து செய்யுமாறு வாகன ஓட்டுனர்கள் வாடிக்கையாளர்களை வற்புறுத்துகின்றனர். இதனால், வாடிக்கையாளர்கள் ரத்து செய்ததற்கான அபராதத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு விடுவதாக புகார்கள் வருகின்றன.மேலும், கட்டணத்தை கணக்கிடுவது குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. குறிப்பாக, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு செல்வதற்கு, இரண்டு பேர்களுக்கு, ஒரே சமயத்தில், இரண்டு விதமான கட்டணங்கள் எப்படி விதிக்கப்படுகிறது என்பது குறித்து கேள்விகள் வருகின்றன.இதுவரை இல்லாத வகையில், தற்போது மிக அதிக அளவில் புகார்கள் வருகின்றன. குறிப்பாக சவாரி ரத்து குறித்து அதிக புகார்கள் வருகின்றன.இவை குறித்த தகவல் மற்றும் விளக்கங்களை கேட்டுள்ளோம். கூட்டத்தில் அவை குறித்து ஆலோசித்து, பின் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)