பதிவு செய்த நாள்
11 மே2022
20:45
புதுடில்லி:இந்தியாவை பொறுத்தவரை பெரும்பாலான நுகர்வோர்கள், தங்கள் நிதி நிலை குறித்து, ‘பாசிட்டிவ்’ மனநிலையில் இருக்கின்றனர். ஆனால், விலை உயர்வு கவலை கொள்ள வைப்பதாக இருக்கிறது.
இது, அவர்களின் வாங்கும் முடிவை பாதிப்பதாக இருக்கிறது என, இ.ஒய்., நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.நுகர்வோர் குறித்த இந்நிறுவனத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:அடுத்த ஓராண்டில், தங்கள் நிதி நிலைமை குறித்து மிகவும் பாசிட்டிவ் மனநிலையில் 77 சதவீத நுகர்வோர் உள்ளனர்.
இதுவே, உலகளவில் பார்த்தால், 48 சதவீதம் பேரே நேர்மறையான எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.வளரும் நாடுகளில் 62 சதவீதம் பேர், விலை அதிகரிப்பது பொருட்களை வாங்குவதில் பாதிப்பை ஏற்படுத்தும் என கவலைப்படுகின்றனர். இந்தியாவில் கிட்டத்தட்ட 64 சதவீதம் பேர், இத்தகைய கவலையை வெளிப்படுத்தி உள்ளனர்.
அதிகரிக்கும் விலை காரணமாக, அதை சமாளிக்க, கடந்த காலத்தை விட அதிகமான பணத்தை சேமிக்கும் முடிவில் 80 சதவீதம் பேர் உள்ளனர்.இதில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர், ஏற்கனவே செலவு செய்வதை விட சேமிப்பதை இலக்காக கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|