பதிவு செய்த நாள்
16 மே2022
21:39
மும்பை : நாட்டில் பணவீக்கம் அதிகரித்திருக்கும் நிலையில், இதற்கு முக்கிய காரணம், உக்ரைன் போர் பாதிப்புகள் தான் என்றும்; பணவீக்க உயர்வு விரைவில் சரியாக வாய்ப்பில்லை என்றும் எஸ்.பி.ஐ., தெரிவித்துள்ளது.
மேலும் ரிசர்வ் வங்கி, ஆகஸ்ட் மாதத்துக்குள் 0.75 சதவீதம் வட்டியை உயர்த்த கூடும் என்றும் தெரிவித்துள்ளது. எஸ்.பி.ஐ., பொருளாதார ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது:
உயர்ந்துள்ள பணவீக்கத்தில் குறைந்தபட்சம் 59 சதவீத அதிகரிப்பு, உக்ரைன் மீதான போரால் ஏற்பட்ட புவிசார் அரசியல் பாதிப்புகளால் உருவானது தான்.கடந்த ஏப்ரலில் பணவீக்கம் 7.8 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், இதை கட்டுப்படுத்தும் வகையில், ஆகஸ்ட் மாதத்துக்குள் மேலும் 0.75 சதவீதம் அளவுக்கு, ‘ரெப்போ’ வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்த வாய்ப்பிருக்கிறது.
உக்ரைன் போர் குறித்து ஆராய்ந்ததில், விலையேற்றத்தில் 59 சதவீதம், போரின் விளைவுகளால் ஏற்பட்டவை என தெரிய வந்துள்ளது. குறிப்பாக, பிப்ரவரி மாத பணவீக்கத்தை அடிப்படையாக ஒப்பிட்டு பார்க்கும்போது, உணவு, பானங்கள், எரிபொருள், மின்சாரம், போக்குவரத்து ஆகியவற்றின் விலையேற்றத்தில் 52 சதவீதம், போரால் ஏற்பட்டதாகும் என்பதை அறிய முடிந்தது.நாட்டின் பணவீக்க உயர்வு, விரைவில் சரியாவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே தோன்றுகிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|