பதிவு செய்த நாள்
18 மே2022
01:53
புதுடில்லி : கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமத்துடன் போடப்பட்ட 49 ஆயிரத்து 129 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, வரி எதுவும் இருக்காது என, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த, ‘ஹோல்சிம்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிறு அன்று, ஹோல்சிம் நிறுவனம், தன்வசம் இருந்த ‘அம்புஜா சிமென்ட், ஏ.சி.சி., சிமென்ட்’ ஆகியவற்றின் பங்குகளை, அதானி குழுமத்துக்கு விற்பனை செய்வதாக ஒப்பந்தம் மேற்கொண்டது.இந்நிலையில், இந்த பரிமாற்றத்துக்கு வரிப்பிடித்தம் ஏதும் உண்டா என்ற கேள்விக்கு, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜான் ஜெனிஷ் கூறியதாவது:
எங்கள் ஆய்வின்படி, இது வரிப்பிடித்தம் ஏதும் இல்லாத பரிவர்த்தனை என்றே கருதுகிறோம். இதில் வேறு எந்த பிரச்னையும் ஏற்படுமா என்று தெரியவில்லை. ஆனால், நிகர வருமானமான 49 ஆயிரத்து 129 கோடி ரூபாய் எங்களுக்கு கிடைக்கும் என கருதுகிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.ஹோல்சிம் நிறுவனத்தின் வசம், அம்புஜா சிமென்ட் நிறுவனத்தின் 63 சதவீத பங்குகளும்; ஏ.சி.சி., சிமென்ட் நிறுவனத்தின் 54.53 சதவீத பங்குகளும் உள்ளன.
இவற்றை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்திருக்கும் நிலையில், பொது சந்தையில் இவ்விரு நிறுவனங்களின் 26 சதவீத பங்குகளை வாங்கும் முயற்சியிலும், அதானி குழுமம் இறங்கி உள்ளது.
@block@@subboxhd@அபுதாபி நிறுவனம் முதலீடு@@subboxhd@@அபுதாபியைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான, ஐ.எச்.சி., அதானி குழுமத்தைச் சேர்ந்த, ‘அதானி கிரீன் எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன், அதானி என்டர்பிரைசஸ்’ ஆகிய மூன்று நிறுவனங்களில், 15 ஆயிரத்து 400 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.@@block@@
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|