பதிவு செய்த நாள்
18 மே2022
20:52
புதுடில்லி: கடந்த ஏப்ரலில், கிட்டத்தட்ட 16 ஆயிரம் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.
பெருநிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகம், இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும், கிட்டத்தட்ட 15 ஆயிரத்து 900 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.மேலும், ஏப்ரல் 30ம் தேதி நிலவரப்படி, நிறுவன சட்டத்தின் கீழ், இதுவரை நாட்டில் மொத்தம் 23.34 லட்சம் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.இவற்றில் 8.29 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.
7,021 நிறுவனங்கள் கலைக்கப்பட்டுள்ளன. மேலும், 43 ஆயிரத்து 851 நிறுவனங்கள் அதிகாரப்பூர்வ பதிவேடுகளில் இருந்து நீக்கப்படும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. 2,416 நிறுவனங்கள் 'செயலற்ற நிலை'யில் உள்ளன.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|