பதிவு செய்த நாள்
19 மே2022
20:06
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ஆரோக்கிய பராமரிப்பு துறையிலும் இறங்குகிறது.
இதற்காக, ‘அதானி வெல்த் வெஞ்சர்ஸ்’ எனும் புதிய நிறுவனத்தை, கடந்த 17ம் தேதியன்று பதிவு செய்துள்ளதாக, அதானி குழுமம் தெரிவித்துள்ளது.பெரிய மருத்துவமனைகளை கையகப்படுத்துவது, பரிசோதனை நிலையங்களை அமைப்பது, மருந்தகங்கள் மற்றும் ஆன்லைன் மருந்தகங்களை அமைப்பது, ஆராய்ச்சி மையங்களை நிறுவுவது என பல வழிகளில் இந்நிறுவனம் ஆரோக்கிய பராமரிப்பில் ஈடுபட உள்ளது.
அதானி ஹெல்த் வெஞ்சர்ஸ் நிறுவனம் விரைவில் செயல்படத் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.துறைமுகங்கள், விமான நிலையங்கள், எரிசக்தி என, பல துறைகளில் செயல்பட்டு வரும் அதானி குழுமம், சிமென்ட் துறையிலும் கால்பதிப்பதற்காக, அண்மையில், சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ‘ஹெல்சிம்’ நிறுவனத்திடமிருந்து, ‘அம்புஜா’ மற்றும் ஏ.சி.சி., சிமென்ட் நிறுவன பங்குகளை கையகப்படுத்தியது.
இப்போது, அடுத்த கட்டமாக ஆரோக்கிய பராமரிப்பு துறையிலும் காலடி எடுத்து வைக்கிறது.இத்துறையில், இந்நிறுவனம் கிட்டத்தட்ட 31 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக, இத்துறையில் உள்ள நான்கு பெரிய நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|