பதிவு செய்த நாள்
22 மே2022
02:13
மும்பை : ‘யூட்டிலிட்டி வெகிக்கிள்’ எனும், பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என, ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.பயணியர் மற்றும் பொருட்கள் ஆகியவற்றின் போக்குவரத்துக்கு ஏற்றதாக இருக்கும் இத்தகைய வாகனங்கள் இப்போது மிகவும் பிரபலமாகி வருகிறது.
அத்துடன், வாகன தயாரிப்பாளர்கள் ‘ஹேட்ச்பேக்’ போன்ற கார்களின் தயாரிப்பு செலவு அதிகரித்து வருவதால், அதில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளாமல், இத்தகைய கார்கள் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பி உள்ளனர்.இது போன்ற காரணங்களால், பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என பிட்ச் ரேட்டிங்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:யூட்டிலிட்டி வாகனங் களின் விற்பனை, கடந்த நிதியாண்டில், ஒட்டுமொத்த கார்கள் விற்பனையில் 40 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இது, இதற்கு முந்தைய நிதியாண்டில் 28 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.யூட்டிலிட்டி வாகனங் களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளதை அடுத்து, ‘ஹேட்ச்பேக்’ மற்றும் ‘செடான்’ ரக கார்களின் மொத்த விற்பனை, 66 சதவீதத்திலிருந்து, 48 சதவீதமாக குறைந்து உள்ளது.மேலும், அதிக எண்ணிக்கையில் புதிய யூட்டிலிட்டி வாகனங்கள் அறிமுகம் ஆவதும் இவற்றின் விற்பனை வளர்ச்சிக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|