பதிவு செய்த நாள்
22 மே2022
02:39
புதுடில்லி : கடந்த ஆண்டில், கொரோனா காலத்தை விட, ஆண்களுக்கான ஆடம்பர பிராண்டு பொருட்கள் விற்பனை அதிகரித்து உள்ளது என, ‘ரிலையன்ஸ் பிராண்டு’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்து உள்ளது.
மேலும் கூறப்பட்டு உள்ளதாவது:ஆய்வில் பங்கேற்றவர்களில் 57 சதவீதம் பேர், அவர்களின் ஆடம்பர பொருட்களுக்கான செலவு அதிகரித்திருப்பதாக தெரிவித்து உள்ளனர்.பெரு நகரங்களில் இல்லாதவர்களில் 65 சதவீதம் பேர், தொடர்ந்து ஆடம்பர பொருட்களை வாங்குவதாக தெரிவித்து உள்ளனர்.
இதுவே, பெருநகரங்களில் 53 சதவீதமாக உள்ளது.கொரோனா கட்டுபாடுகளின் போது, வசதி மிக்கவர்களில் மூன்றில் இருவர், ஆடம்பர பொருட்களை முதல் முறையாக வாங்கி உள்ளனர்.மேலும் 58 சதவீதம் பேர், தொழில்நுட்பம் சார்ந்த பொருட்களை வாங்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக, வீட்டில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதை அடுத்து, பொழுதுபோக்குக்கு உதவக்கூடிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி உள்ளனர்.இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|