பதிவு செய்த நாள்
24 மே2022
21:46
புதுடில்லி : நாட்டின் ஏற்றுமதி, இம்மாதம் 1 – 21ம் தேதி வரையிலான காலத்தில், 23.7 சதவீதம் உயர்ந்துள்ளதாக, மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
கடந்த 1 – 21ம் தேதி வரையிலான காலத்தில், 1.85 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி ஆகியுள்ளன. இது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 23.7 சதவீதம் அதிகமாகும். பெட்ரோலியப் பொருட்கள், பொறியியல், மின்னணு சாதனங்கள் ஆகிய துறைகளில், அதிகளவில் ஏற்றுமதி நடைபெற்று உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில், ஏற்றுமதி 30.7 சதவீதம் அதிகரித்து, 3.13 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருந்தது. இதை தொடர்ந்து, நடப்பு மே மாதத்திலும் ஏற்றுமதி அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மே மாத மொத்த ஏற்றுமதி நிலவரம், மத்திய வர்த்தக துறையால், ஜூன் மாதம் வெளியிடப்படும்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|