பதிவு செய்த நாள்
25 மே2022
22:00
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
‘வேதாந்தா’வின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் 29.5 சதவீத பங்குகள், மத்திய அரசின் வசம் உள்ளன. வேதாந்தா வசம் 64.92 சதவீத பங்குகள் உள்ளன.இந்நிலையில், மத்திய அரசு, அதன் வசம் இருக்கும் அனைத்து பங்குகளையும் விற்க முடிவு செய்திருப்பதாகவும்;
இதற்கு மத்திய அமைச்சரவை குழு அனுமதி வழங்கி உள்ளதாகவும், தகவல்கள் வருகின்றன.கடந்த நிதியாண்டின் நிலவரப்படி, ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு 2,844 கோடி ரூபாய் கடனாக உள்ளது.
இந்த பங்குகளை அரசு மொத்தமாக விற்பனை செய்ய உள்ளதா அல்லது சந்தை நிலவரத்தை ஒட்டி, பகுதி பகுதியாக விற்பனை செய்ய உள்ளதா என்பது போன்ற தகவல்கள் எதுவும் தெரியவில்லை. இச்செய்தி ஊடகங்களில் பரவியதை அடுத்து, இந்நிறுவன பங்குகள் விலை, நேற்று தேசிய பங்குச் சந்தையில் 4.10 சதவீதம் அதிகரித்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|