பதிவு செய்த நாள்
26 மே2022
19:06
புதுடில்லி : இந்திய அரசு மும்பை பங்குச் சந்தையில் வோடபோன் ஐடியா லிமிடட்(விஐஎல்)-ன் அதிக பங்குகளை வாங்க பங்குச்சந்தை கட்டுபாட்டு அமைப்பான செபி சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.
இந்திய டெலிகாம் நிறுவனங்களில் ஏர்டெல், ஜியோவுக்கு அடுத்து அதிக லாபம் ஈட்டும் நிறுவனம் வோடபோன் ஐடியா(விஐஎல்) உள்ளது. அதிகரிக்கும் பயனாளர்கள் காரணமாக மும்பை பங்குச் சந்தையில் வோடபோன் ஐடியா பங்குகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்திய அரசு பங்குகளில் முதலீடு செய்து அதன் லாபத்தைக் கொண்டு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செய்து வருகிறது. இதனையடுத்து இந்திய அரசு வோடபோன் ஐடியா பங்குகளை குறிப்பிட்ட சதவீதம் வாங்க பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி அனுமதி வழங்கியுள்ளது.
டெலிகாம் நிறுவனத்தின் பொதுப் பங்குகளை வாங்குவதால் மத்திய அரசு தனியார் வங்கிகளுக்கு சலுகை அளிக்க முடியும். இதன்மூலமாக வாடிக்கையாளர்கள் பயனடைவர். மேலும் இந்திய அரசு வோடபோன் ஐடியா நிறுவன பங்குகளை வாங்குவதால் அந்நிறுவனத்தை கட்டுப்படுத்த முயலாது என கூறியுள்ள செபி, இதுகுறித்த ஒன்பது பக்க அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|