பதிவு செய்த நாள்
26 மே2022
20:39
புதுடில்லி–இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சியில் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், வரும் மாதங்களில் இது குறித்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த 2021 – 22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையின் போது, இந்த ஆண்டில், இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் நோக்கத்தை அரசு அறிவித்தது. மேலும், பொதுத்துறை நிறுவனங்களின் முதலீட்டு கொள்கைக்கும் அனுமதி வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.அதன்படி, இரு வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்த பணிகளை அரசு தொடர்ந்து வருகிறது.
அத்துடன் ‘பாரத் பெட்ரோலியம்’ நிறுவன பங்குகளை விற்பது குறித்தும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ‘நிதி ஆயோக்’ நிறுவனம், தனியார்மயமாக்குவதற்காக ஏற்கனவே இரண்டு வங்கிகள், ஒரு காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றின் பெயர்களை முன்மொழிந்து உள்ளது.அனேகமாக அவை, ‘சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி’ ஆகியவையாக இருக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|