ரிசர்வ் வங்கி துணை கவர்னர் உஷா தோரட் ஓய்வுரிசர்வ் வங்கி துணை கவர்னர் உஷா தோரட் ஓய்வு ... சலுகை திட்டங்களால் அமெரிக்க டாலரின் மதிப்பு கடும் சரிவு சலுகை திட்டங்களால் அமெரிக்க டாலரின் மதிப்பு கடும் சரிவு ...
வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்வு: சவரன் 15 ஆயிரம் ரூபாயையும் தாண்டியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2010
02:04

சென்னை: ஆபரணத் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் கடந்த மூன்று நாட்களில் சவரனுக்கு 505 ரூபாய் வரை அதிகரித்து, நேற்று சவரன் 15,160 ரூபாய்க்கும், ஒரு கிராம் 1,895 ரூபாய்க்கும் விற்பனையானது. தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில், சவரன் 14 ஆயிரம் ரூபாயை தாண்டியது. செப்டம்பர் மாதம் முதல் தேதி ஆபரணத் தங்கம் விலை உச்சபட்சமாக, சவரன் 14,280 ரூபாய்க்கும், ஒரு கிராம் 1,785 ரூபாய்க்கு விற்பனையானது. தொடர்ந்து ஏறுமுகமாக இருந்துவந்த தங்கம் விலை, கடந்த செப்டம்பர் 8ம் தேதி எப்போதும் இல்லாத வகையில், சவரன் 14,328 ரூபாய்க்கும், ஒரு கிராம் 1,791 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்நிலையில், கடந்த 4ம் தேதி சவரன் 14,656 ரூபாய்க்கும், ஒரு கிராம் 1,832 ரூபாய்க்கும் விற்பனையானது. 5ம் தேதி தீபாவளி பொதுவிடுமுறை. 6ம் தேதி ஒரே நாளில் சவரனுக்கு 224 ரூபாய் வரை அதிகரித்து, 14,880 ரூபாய்க்கும், ஒரு கிராம் 1,860 ரூபாய்க்கும் விற்பனையானது. ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்பதால், அதே விலைக்கு விற்பனையானது. நேற்று முன்தினம் சவரனுக்கு மேலும் 56 ரூபாய் அதிகரித்து 14,936 ரூபாய்க்கும், ஒரு கிராம் 1,867 ரூபாய்க்கும் விற்றது. நேற்று காலை நிலவரப்படி, சவரனுக்கு 224 ரூபாய் அதிகரித்து, 15,160 ரூபாய்க்கும், ஒரு கிராம் 1,895 ரூபாய்க்கும் விற்பனையானது. மாலையிலும் அதே விலைக்கு விற்பனையானது. கடந்த மூன்று நாட்களில் சவரனுக்கு 504 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் 8ல் சவரன் 14,328 ரூபாய்க்கும், ஒரு கிராம் 1,791 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த இரண்டு மாதத்தில் சவரனுக்கு 832 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சவரன் 11,792 ரூபாய்க்கும், ஒரு கிராம் 1,474 ரூபாய்க்கும் விற்றது. கடந்த ஓராண்டில் சவரனுக்கு 3,368 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. 24 காரட் விலையும் 'விர்ர்': இதுவரை 19 ஆயிரம் ரூபாயை தாண்டாத பத்து கிராம் சுத்த தங்கம், நேற்று வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. பத்து கிராம் சுத்த தங்கத்தின் விலை கடந்த செப்டம்பர் மாதம் 19,295 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று முன்தினம் 10 கிராம் தங்கம் 20,080 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று 10 கிராம் தங்கம் 295 ரூபாய் அதிகரித்து, 20,375 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த இரண்டு மாதத்தில் 10 கிராம் சுத்த தங்கம், 1,080 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு நவம்பரில் சுத்த தங்கம் 15,860 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஓராண்டில் பத்து கிராம் சுத்த தங்கம் விலை 4,515 ரூபாய் அதிகரித்துள்ளது. மதுரை: மதுரையில் இம்மாதம் துவக்கத்தில் ஒரு கிராம் தங்கம் 1,848 ரூபாயாக இருந்தது. நவ., 4, 5ல் விலையில் மாற்றமில்லை. நவ., 5 தீபாவளி என்பதால், விலை குறையும் என எதிர்பார்த்த பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நவ.,6ல் ஒரு கிராம் தங்கம் 1,880 ரூபாயாக உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் 8 ரூபாய் அதிகரித்து 1,888 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தங்கம் வியாபாரிகள் கூறுகையில், 'ஆன்-லைன் வர்த்தகத்திலிருந்து தங்கத்தை நீக்கினால்தான் விலை சீராக இருக்கும். கட்டுப்பாடில்லாமல் விலை உயருவதால், நடுத்தர மக்களால் இனி ஒரு குண்டுமணி தங்கம்கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் ஒரு கிராம் 2,000 ரூபாய்க்கு விற்க வாய்ப்புள்ளது. புத்தாண்டு சமயத்தில், 2,500 ரூபாய்க்கு விற்றாலும் ஆச்சரியமில்லை' என்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)