பதிவு செய்த நாள்
09 மார்2011
09:28
புதுடில்லி: மெர்சிடிஸ் பென்ஸ் கார் நிறுவனம், இந்தியாவில் உயர் வகை சொகுசு கார்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் சென்ற பிப்ரவரியில், 661 கார்களை விற்பனை செய்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 51 சதவீதம் அதிகமாகும். நிறுவனத்தின், சி பிரிவு கார்கள் விற்பனை 110 சதவீதம் அதிகரித்து, 172 என்ற எண்ணிக்கையிலிருந்து 362 கார்களாக அதிகரித்துள்ளது. சென்ற பிப்ரவரியில், இ பிரிவு கார்கள் விற்பனை 230 ஆக உயர்ந்துள்ளது. இது, 2010ம் ஆண்டு பிப்ரவரியில் 161 என்ற எண்ணிக்கையில் இருந்தது. எஸ்.யூ.வி. பிரிவில் 23 கார்களும், எம்.எல். மற்றும் ஆர் பிரிவில் 27 கார்களும். சென்ற பிப்ரவரி மாதத்தில் விற்பனையாகி உள்ளன என்று நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|