பதிவு செய்த நாள்
09 மார்2011
09:49
ஐதராபாத் : தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு, மொபைல்போன்கள் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் உபகரணங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் குழுமத்தின் ஒருஅங்கமான எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இந்தாண்டில் 40 புதிய மொபைல்போன்களை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஐதராபாத்தில், பத்திரிகையாளர்களை சந்தித்த எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (மொபைல் கம்யூனிகேசன்ஸ் பிரிவு ) உயர் அதிகாரி விஷால் சோப்ரா கூறியதாவது, புதிதாக அறிமுகம் செய்ய உள்ள 40 மொபைல்போன்களில் 10 முதல் 12 போன்கள் 3ஜி வசதி கொண்டது என்றும், மற்ற போன்கள் ஸ்மார்ட் போன்கள் என்றும் அவர் தெரிவித்தார். விரைவில் இந்தியச் சந்தையில் விற்பனையில் முன்னணி இடத்தைப் பெறும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|