பதிவு செய்த நாள்
09 மார்2011
10:20
திருச்சி : இந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கிளை திருச்சியில் செயல்பட்டு வருகிறது. ரூ. 600 கோடி முதலீட்டில், விரிவாக்கத்தில் ஈடுபட உள்ளதாக திருச்சி பெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, கொச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்த திருச்சி பெல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஏ.வி. கிருஷ்ணன் கூறியதாவது, பேஸ் 3 விரிவாக்கத் திட்டத்தின் புதிதாக பாய்லர் பிளாண்ட் அமைக்கப்பட உள்ளது.பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகள் மற்றும் அணுஉலை உபகரணங்கள் தயாரிப்பு நிறவனங்களிடையே தேவை அதிகரித்திருப்பதன் விளைவாக, விரிவாக்கத்தில் ஈடுபட உள்ளதாக அவர் தெரிவித்தார்.2009-10ம் நிதியாண்டில், தங்கள் நிறுவனம், ரூ. 10,008 கோடி அளவிற்கு வர்த்தகம் மேற்கொண்டிருந்ததாகவும், இந்த 2011-12ம் நிதியாண்டில், 12,765 கோடி அளவிற்கு வர்த்தகம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|