சென்னை நிறுவனத்துடன் அமெரிக்க நிறுவனம் கைகோர்ப்புசென்னை நிறுவனத்துடன் அமெரிக்க நிறுவனம் கைகோர்ப்பு ... பருப்பு வகைகள் இறக்குமதி 16 லட்சம் டன்னாக குறைந்தது பருப்பு வகைகள் இறக்குமதி 16 லட்சம் டன்னாக குறைந்தது ...
வாடிக்‌கையாளர்கள் எண்ணிக்கையில் மட்டுமல்ல புகார்களிலும் ஏர்டெல் முன்னணி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2011
16:47

புதுடில்லி : அதிகளவில், வாடிக்கையாளர்களை கொண்டுள்ள முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம், வாடிக்கையாளர்களிடமிருந்து அதிகளவிலான புகார்களை பெறுவதிலும் முதலிடம் வகிக்கிறது. இன்றைய நவநாகரீக உலகில், மனிதனின் புலனுறுப்புகளில் ஒன்றாக மொபைல்போனும் இடம்பெற்றுள்ளது. முன்னர் காலத்தில், ஆடையில்லாத மனிதன் அரை மனிதன் என்று கூறுவார்கள். ஆனால் இன்றைய நிலையில், மொபைல்போன் இல்லாதவன் மனிதனே இல்லை என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். அவ்வளவு இன்றியமையாததாக இன்று மொபைல்போன் மாறியுள்ளது. ஆள் ஒன்றுக்கு, ஒரு மொபைல்போன் உபயோகித்த காலம் போய், இன்று, 2 நபர்கள் உள்ள குடும்பத்திற்கு 3 ‌மொபைல்போ்னகள் பழக்கத்தில் உள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில், தொலைதொடர்பு நிறுவனங்கள் கவர்ச்சிகரமான திட்டங்களை வழங்கி, வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகி்ன்றன. இதன்படி, வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் முன்னணி இடத்தில் பார்தி ஏர்‌‌டெல் நிறுவனம் உள்ளதாக டெலிகாம் ரெகுலேட்டரி அத்தாரிட்டி ஆப் இந்தியா (டிராய்) அறிவி்த்துள்ளது ஏர்டெல் நிறுவனத்தை மகிழ்ச்சியடைய செய்துள்ள நிலையில், தங்களது சேவைக்கான பில்கட்டணம் வசூலித்தல், கால அளவீடு மற்றும் வாடிக்கையாளர்களை கேட்காமல், அவர்களுக்கு மதிப்புகூட்டு சேவைகளை ஆக்டிவேட் செய்வது தொடர்பான அதிகளவில் புகார் வருவதும் இந்த ஏர்டெல் நிறுவனத்திற்கு தான் என்று டிராய் மேலும் தெரிவித்துள்ளது. இதுகுறி்த்து, டிராய் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2008-09, 2009-10, 2010-11 (டிசம்பர் வரை) இந்த 3 ஆண்டுகள் கால அளவில், ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்களிடமிருந்து 3,571 புகார்களும், ரிலையன்ஸ் நிறுவன வாடிக்கையாளர்களிடமிருந்து 2,151 புகார்களும், வோடபோன் எஸ்ஸார் நிறுவன வாடிக்கையாளர்களிடமிருந்து 1,896 புகார்களும், டாடா டொகாமோ நிறுவன வாடிக்கையாளர்களிடமிருந்து 1,239 புகார்களும் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவன வாடிக்கையாளர்களிடமிருந்து 925 புகார்களும் தங்களுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களிடமிருந்து வந்துள்ள புகார்களுக்கு உரிய தீர்வை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று அந்த தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)